புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 29, 2011

மின்னல்...


சட்டென்று வந்து 
வெட்டிச் செல்லும் 
மின்னலைப்  போல 
அவனின் எதிர்பாரா 
முத்தத்தில் அதிர்ந்து 
போகிறேன்...

படங்கள் உதவி : கூகுள் இணையம் 


என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ஆமினா
 (குட்டி சுவர்க்கம்)அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    

Post Comment

அக்டோபர் 21, 2011

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 4

நாயுருவி 

பார்க்க தான் அழகுங்க ... 

ஓடி ஓடி உழைக்கணும் ...

நான் கடிச்சா தாங்கமாட்ட ... 

நான் கொஞ்சும் இயற்கை 

காசில்லா சீப்புங்க ...

சோடி மலர்தாங்க ...

நீங்களே ஒரு பெயர் வையுங்க ...


என் பெயரை கூறுங்க பார்ப்போம் ...

நான் கருப்பு வைரம்ங்க ...


(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ராஜி (கற்றலும் கேட்டலும்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)


குறிப்பு: நமது சக நண்பர் அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் வரும் வாரத்திலிருந்து அவரின் குடந்தையூர் தளத்தில் இளமை எழுதும் கவிதை நீ என்ற தொடர்கதை எழுத உள்ளார், நண்பர்களாகிய நீங்களும் உங்கள் ஆதரவை வழங்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி 

Post Comment

அக்டோபர் 14, 2011

நுட்ப வளர்ச்சி...


எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்த நாட்டில் அதை பயன் படுத்துவதை விட இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அறிமுக படுத்தி காசாக்க எண்ணுகிறார்கள்! அதை செய்தும் காட்டிவிட்டனர்.

"கவர்ச்சிகளை கண்டு மயங்குவதில் நமக்கு நிகர் நாமே தான் "

பெரும்பான்மையான பொருட்களை நாம் உதாரணமாக காணலாம் . 

அதில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் விளம்பர பதாகைகள்! எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு வடிவில் இதை காணாத இடமே இல்லை. கிராமத்திலும் சரி , நகரத்திலும் சரி எங்கும் ஒரே நிலை தான். அதுவும் குறிப்பாக மூன்று நான்கு வருடங்களில் இதன் வளர்ச்சி அசூரத்தனமான வளர்ச்சி.நல்ல மாற்றம் தான் , தொழில்நுட்ப வளர்ச்சிதான். கண்டு பிடித்த ஒரு பொருளை அதன் பயன்பாட்டை விட மற்ற வழிகளில் பயன்படுத்துவதில் நம்மாட்கள் வல்லவர்கள்! 

முதலில் இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் சினிமா துறையில் பெருமளவில் பயன்படுத்தினர், பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் புதியதாய் தொழில் தொடங்கும் முதலாளிகள் தங்களின் கடைகளுக்கு மின்னொளியில் சிரிக்கும் விளம்பர பலகைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். பளிச்சென்று கண்ணை கவரும் நடிகைகளையும், தலைவர்களையும் கண்டு ஒரு ஈர்ப்பு வந்து அதன் தாக்கமாய் நமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ திருமண வாழ்த்து பதாகைகளை வைத்து அழகு பார்த்தோம். பிறகு கொஞ்சம் நகர்ந்து ஊரின் திருவிழாக்களுக்கு வரவேற்பு பலகைகள் அமைத்து பெருமையாய் கொண்டாடினோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்து பிறந்த நாள் விழாக்களுக்கு (?!) வைத்து பெருமையை பறை சாற்றினோம். 

ஒரு பொருளை எந்த நோக்கத்திற்கு கண்டு பிடித்தானோ அதையும் மீறி நாம் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தி கண்டுபிடித்தவனுக்கு எண்ணியதை விட வருமானத்தை பெருக்கி கொடுக்கும் வல்லமை நம் மக்களுக்கு தான் உண்டு. திருமண வாழ்த்துக்களை உறவினர்களோ , நண்பர்களோ தெரிவிப்பார்கள் அவர்களுக்கு முடிந்த வடிவில். முன்னரெல்லாம் ஒரு சின்ன வாழ்த்து மடல் அச்சடித்து அதன் ஓரத்தில் இனிப்பாய் ஒரு மிட்டாயை இணைத்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் வழங்குவார்கள். சமீப காலமாக எல்லோர் திருமண வீட்டிலும் இந்த டிஜிட்டல் பதாகைகள் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது. இன்றைய நிலை வேறுமாதிரி உள்ளது , தன் வீட்டு நிகழ்வுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரித்த வண்ணம் ஒரு பதாகைகளை தாங்களே வைத்து தமது குடும்பங்களின் பெருமையையும்? , பொருளாதரத்தையும் வெளிக்கொணரும் விதமாக காட்டிகொள்கிறார்கள்.

இப்படி அங்கும் இங்கும் சிரிக்கும் பலகைகள் பெரும்பாலும் பெருமைக்கு வைக்கப் பட்டவைகளாகவே இருக்கின்றது. விவசாய விழிப்புணர்வோ, கல்வி விழிப்புணர்வோ, நமது பண்பாடு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வாகவோ இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை ...இதில் கொடுமை என்னவெனில் எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது, இன்னும் சில காலம் கழித்து பார்த்தால் நிமிர்ந்தாலும், குனிந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் பதாகைகள் அமைத்து அழகு பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம் என்று அஞ்சதோன்றுகிறது. 

இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம். நான் இதை கூறுவதால் இந்த தொழில்நுட்பத்துக்கு எதிரி இல்லை.. இதை பயன் படுத்த வேண்டிய இடத்தில் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகிறேன். இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவன் நாம் பயன்படுத்துவது போல் அவன் வீதிகளிலோ, வீடுகளிலோ பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் நட்புகளே!!!

இந்த பலகைகளை எங்கு எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இல்லாமல் ஊருக்கு மத்தியிலோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ, சாலைகளை இணைக்கும் முக்கிய வளைவுகளிலோ வைத்து அழகு பார்க்கின்றனர். விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அப்புறபடுத்தாமல் விட்டு விடுகிறோம். அது முறிந்து விழுந்து,  பல விபத்துகளுக்கும், உயிர் சேதங்களுக்கும், வாகன ஓட்டிகளின் சிரமத்திற்கு நாமே காரணமாகின்றோம் என்பதை உணர மறுக்கின்றோம். 

பெயரளவில் நெறிமுறை படுத்தும் அரசு இதை கடுமையான சட்டம் இயற்றி நெறிபடுத்தினால் மதிப்புமிக்க பல உயிர் இழப்புகளையும், இன்னும்பிற  சேதங்களையும்  முன்கூட்டியே தடுக்கலாம். மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...

Post Comment

அக்டோபர் 07, 2011

செல்ல கோபம்...



கலைந்து கூடும் 

மேகங்களாய் - அவளின் 
கோபங்கள் 
வரமாலும் இல்லை 
வலுவாகவும் இல்லை...

Post Comment