புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 25, 2012

பாவிகளின் பூமியிது!


பட்டாம்பூச்சியின் தலையில் 
பாரம் சுமத்திய 
பாவிகளின் பூமியிது!

வறுமையை விரட்ட, 
வாழ்க்கையை விற்ற
இறகை துறந்த 
பொன்வண்டுகளின் பூமியிது! 

எழுதுகோல் பிடிக்கும் 
கரத்தில், ஏக்கத்தை 
புகுத்திய நெருஞ்சிற், 
கூடாரமிது!

இளந்தென்றல் இவர்கள் 
சேமித்த சில்லறைகளில் 
கேட்கின்றது எதிர்கால 
இந்தியாவின் அழுகை 
குரல்!

இவர்களின் கைரேகை 
மறைய, மறைய 
உயர்கிறது 
வறுமை கோட்டின் 
வளர்ச்சி ரேகை!

அரசியல் முரடர்களே,
இனியும் சொல்லாதிர் 
நாளைய இந்தியா 
இளைஞர்கள் 
கையிலென்று! 

Post Comment

ஜூன் 21, 2012

தரை தட்டிய கப்பலாகிறது... (செம்மண் தேவதை - 1)



அழுந்த பிண்ணிய 
ரெட்டை சடையில்,
வெட்கி குனியும் 
ஒற்றை செம்பருத்தி,
சாயம் பூசாமல் 
சிவந்த உதடு,
அலட்டாமல் 
அசரவைக்கும் 
பேரழகு!
நேர் நோக்கிய 
அவளின் பார்வையில் 
தரை தட்டிய 
கப்பலாகிறது 

"மனசு" 

(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய அண்ணாச்சி மயிலன்  ( 

அவர்களுக்கு என் நன்றிகள்) 

Post Comment

ஜூன் 11, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 8


அந்திவேளையில்...


கம்பங்கருது 


சும்மா ஒரு விளம்பரம்..


இந்த முடிச்சுக்குள் என்ன இருக்கு சொல்லுங்க பாப்போம் 


புரையோடிய பனை..


பருத்திச்செடி 


சுருங்கிய மலர் 


என்னவென்று சொல்லுங்க பாப்போம் 


இதுவும் ஒரு விளம்பரம்தான் 


கேழ்வரகு கருது 

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment