புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 07, 2014

இடுப்புக்கு சற்றும் கீழே...




இடுப்புக்கு சற்றும் கீழே தொடும் 
கருங்கூந்தல் அவளுக்கு!

அவசரமோ, அழகியலோ?
பின்ணாமல், 
முடிந்தே இருப்பாள்!

நெருங்கி நிற்கும்,
பேருந்து பயணங்களில்,  
வரும் கனவுகளை 
நீர் தெளித்து கலைத்திருக்கின்றன 
இரக்கமற்ற ஈரக்கூந்தல்!

அவளும் பேசியதில்லை,
என்னையும் 
பேச அனுமதிப்பதில்லை  
அவளின் புதை குழி கண்கள்!

அவள் வெட்கம் தொலைக்க, 
நான் அச்சம் துறக்க, 
காத்திருக்கிறது 
"காதல்"



Post Comment

11 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

Nice kavithai na...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajamelaiyur சொன்னது…

கவித ..... கவித....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசிக்க வைத்தது கவிதை! வாழ்த்துக்கள்!

aavee சொன்னது…

கவிதையை விட எனக்கு டைட்டில் ரொம்ப பிடிச்சது..

ராஜி சொன்னது…

யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து இவனுக்கு கட்டி வைங்கப்பா! கவிதை எழுதியே கொல்றான்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

//புதை குழி கண்கள்//

ஏதும் வியாதி இருக்குமோ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை அரசன். .....

Seeni சொன்னது…

Super...

முத்தரசு சொன்னது…

கடைசி வரி முரண்

கடைசி மூன்றெழுத்து முரண்