புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 23, 2011

புறப்படுவோம்!!!


















வேருக்கு எவரும் 
சொல்லித்தரவில்லை,
                    வளர்வதற்கு!

எறும்புக்கு எவரும் 
உணர்த்தியதில்லை,
      அதன் சுறுசுறுப்பை!

காய்க்கு எவரும் 
கற்றுத்தரவில்லை,
                  கனிவதற்கு!

மலர்களாய் இருக்க 
முயலு- அதற்குமுன்
காம்பின் வலிகளை 
அறிந்துகொள்!

கிழிபடும் நாட்காட்டி 
தாளாய்-இராதே,
நாட்களை சுமக்கும் 
அட்டையாய் முயலு!

துவண்டால் சாய, 
தோளினை தேடாதே!
நிமிர்ந்து நிற்க 
கால்களை நம்பு!

நேற்றைய உலகம் எவர் 
பெயரையோ உச்சரித்திருந்தாலும்,

நாளைய உலகம் உனது 
பெயரை உச்சரிக்கட்டும்!


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் ! ♥ வேடந்தாங்கல் ♥ ! கருண் அவர்களுக்கு நன்றி ....


Post Comment

மே 10, 2011

சித்திரை மாச காத்துல...





மல்லிப்பூவ நெறையா வைச்சி,
மஞ்சள் பொட்டு வச்சி!,
கருநீல தாவணியில புள்ள,
முதன் முதலா பார்க்கையில,
எம் மனசு மயங்குதடி,
சிறு உசுரும் கரையுதடி.

செவந்த உதட்டால சின்னதா 
சிரிப்பு ஒன்ன உதுத்துவிட்டு 
சென்றேயடி!உங்கூட 
நான் வருவது தெரியாமலே!

இந்த சித்திரை மாச 
காத்துல தெக்கு தெச 
தெரியாம நிக்கிறேன்டி,
திரும்ப உன்ன எப்ப தான் 
பார்ப்பமுன்னு!!!

Post Comment

மே 03, 2011

அக்சய திருதியை ...




அக்சய திருதியை என்றாலே அனைவரின் மனதில் சட்டென உதிப்பது குண்டுமணி அளவாது தங்கம் வாங்க வேண்டும் என்றுதான். அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுதும் நாம் தங்கம் வாங்கி கொண்டே இருப்போம் (!?) என்பது  தான் இன்றைய பெரும்பாலான மக்களின் மன நிலை. 

அறிவியலின் துணை கொண்டு அதிவேகமாக முன்னேறும் நாம் இந்த பாழும் மூட நம்பிக்கையில் தான் இன்றும் பின்னோக்கியே செல்கிறோம் என்பது கசப்பான உண்மைதான். அவற்றுள் ஒன்றுதான் இந்த "அக்சய திருதியை".

இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை யார் பரப்பியது?. யாரின் தூண்டுதல் இருக்கும்?. ஒரு பொய்யான பரப்புரைக்கு பின் பெரியே கூட்டத்தின் சுய நலம்தான்  காரணமாக இருக்க முடியும். கவர்ச்சி விளம்பரம் காட்டி இன்னும் மக்களை மயக்க நிலையிலே வைத்து தங்களது லாபத்தை கூட்ட முயலுகின்ற கூட்டம் இங்கு நிறையவே  இருக்கின்றனர்.

அக்சய திருதியை மோகம் உச்சத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம். முதல் நாள் பின்னிரவிலே இருந்து  நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று குண்டு மணி அளவாது தங்கம் வாங்கி விட வேண்டும் என்ற வெறி மனதில் குடி புகுந்து ஆட்டுவிக்கிறது. இன்னும் சிலர் வட்டிக்கு வாங்கியாவது தங்கம் வாங்குகின்றனர். அந்த வருடத்தில் அவர்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பை விட கட்டிய வட்டியின் மதிப்பு தான் அதிகமாக இருக்கும். இந்நிலைக்கு யார் காரணம்???

லட்ச கணக்கில் பணம் கொடுத்து முன்னணி நடிகையை வைத்து விளம்பரம். நிமிடத்திற்கு நிமிடம் தொலைகாட்சியில் பரப்புரை. நம் மக்களை எளிதில் வசிய படுத்தி அதன் மூலம் தங்களது எண்ணங்களை நிறைவேற்றி கொள்வது தான் இன்றைய முதலாளிகளின் வியாபார யுக்தி. இன்னும் அதை உணராமல் அவர்கள் விரித்த வலையில் சிக்கி அல்லல் படுகிறோம் என்பது மறுக்க முடியா உண்மை. எரியும் வீட்டில் பிடுங்கி கொள்வதெல்லாம் லாபம் என்பது போல் நம்மிடம் எந்தெந்த வழிகளில் சுரண்ட முடியுமோ அனைத்து வழிகளிலும் முயலுகிறார்கள் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஒருவேளை அவர்கள் கூறுவது போல் அக்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் தங்கம் விளைவது உண்மை என்றால், தங்கம் வாங்கும் நமக்கு விளையும் என்றால், அன்றைய தினத்தில் தங்கத்தினை பெருமளவில் விற்கும்  அவர்களின் நிலை என்னவாக இருக்க வேண்டும் ????!!!!. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே!

இறுதியாக,
மூடநம்பிக்கை வேறு!, இறை நம்பிக்கை வேறு என்று உணரும் நிலை வந்தால் தான் இந்நிலை மாறும் என்று நம்புகிறேன்.

Post Comment