புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 22, 2011

மல்யுத்தம்!?...


மலர்களுக்குள் மல்யுத்தம்
என்னவளை யார்
முதலில் சூடிக் கொள்வதென்று...

**************************************************

மாற்றம்...

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய் 
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...

***************************************************
மறதி...

உன்னை பார்த்துக்கொண்டே 
பேசும்போது இமைகள்
துடிக்க மறக்கின்றது...




(சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் 
அறிமுக படுத்திய நண்பர் திரு. ரஹீம் கஸாலி அவருக்கு நன்றி...)

Post Comment

பிப்ரவரி 09, 2011

நிலாப்பெண்ணே...











நிலாப்பெண்ணே உன்னழகை


இரசிக்க கண்ணாடி 


பார்க்க அவசியமில்லை!


என்னைப்பார் உனது 


பிம்பத்தின் எதிரொளியாய்
                                      -நான் 



Post Comment

பிப்ரவரி 01, 2011

எனது கிராமத்தின் அழகை கொஞ்சம் ரசிக்க வாருங்களேன்...

சூர்யோதயம் ...

                                              பனியில் நனைந்த மலர்

                                           மேகங்களின் அழகு...

                                          நான்தாங்க தும்பை ...

                                          இணைபிரியா தோழர்கள்...

                               இன்னும் பெயர் வைக்கல எனக்கு ...

                                              சோளக்கதிர்...

                                        எப்படி நான் .. சொல்லுங்க ...

                                     எங்க லவ்ச கொஞ்சம் பாருங்க ...

                              எங்க ஊரு சூரியன் மறையும் போது...

(அனைத்து படங்களும் எனது சொந்த ஊரில் என்னால் எடுக்கப்பட்டது..
படத்தின் மேல் கிளிக்கினால் பெரியதாக பார்க்கலாம் ..) 



Post Comment