புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 30, 2012

புள்ளி மானாய்...


வேடுவனைக் கண்ட 
புள்ளி மானாய் 
துள்ளி ஓடுகிறாய்!
காதலை சுமந்து 
நிற்கும் என் 
நெஞ்சத்தை, 
கிள்ளிக் கொண்டு!

Post Comment

ஜனவரி 27, 2012

இனியுந்தான் வருமா?


குறுகிய வட்டமிட்டு, 
இலுப்பைகளை 
கொஞ்சமிட்டு 
வட்ட சில்லால, 
செத்தி விளையாடிய 
சிலிர்ப்பான காலம்!
                          இனியுந்தான் வருமா?

பொய்யான பூச்சாண்டிக்கும் 
புள்ளை புடிப்பவனுக்கும்,
அஞ்சி! தளர்ந்த 
தாத்தாவின், தளராத 
இறுக்கத்தில் உறங்கிய
உயிர்ப்பான காலம்!
                          இனியுந்தான் வருமா?

ஊர்த்திருவிழாவுல,
ஊதாப்பலூன் வாங்கி,
ஒய்யாரம ஓடி 
வருகையில வெடிச்சதும் 
உடைஞ்சி அழுத 
அழகிய காலம்!
                      இனியுந்தான் வருமா?

அம்மா சுழற்றும் 
திருகையில தவறாம 
தானியம் நிரப்பி 
அரைச்சி மகிழ்ந்த 
அற்புத காலம்!
                    இனியுந்தான் வருமா?

எள்ளு சங்காயம்,
கருப்பஞ்சருகு கொளுத்தி 
மார்கழி குளிரை 
மிரட்டி அனுப்பிய 
மிடுக்கான காலம்!
                 இனியுந்தான் வருமா?

பொழுதெல்லாம் ஓடியாடி 
தேஞ்சாலும், இரவுல 
மயிலிறகா வருடுது 
அந்த கனாக்கால
நினைவுகள்! ஏக்கங்களை 
சுமந்து கொண்டு ...

Post Comment

ஜனவரி 23, 2012

ஆடை...


என்றைக்கும் மனிதர்கள் அதிகம் முக்கியத்துவம் செலுத்தும் பொருட்களில் ஆடைகளும் நிச்சயம் இருக்கும்.
அழகாய் உடையணிந்து அனைவரையும் கவரவேண்டும் என்பதில் அதிகம் பேர் ஆவல் கொள்வர். அது இயல்பு.
ஒவ்வொரு கட்டத்திலும் அதன் சூழலுக்கு, காலத்திற்கு, மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது வடிவம் அடைந்து 
வந்துள்ளது .. வந்து கொண்டும் இருக்கின்றது. அதன் வடிவத்திலும், வடிவாக்கதிலும் சரி, புதுப்புது வடிவம் கொண்டு மக்களின் 
நாகரிக வளர்ச்சியை மேம்படுத்தி உலகத்திற்கு பறை சாற்ற ஆடை அதிகம் முக்கியத்துவத்தில் உள்ளது.
உடைகளுக்கு மயங்காத மக்கள் இல்லை என்றே கூறலாம் . அந்த அளவுக்கு ஆடைகளின் மோகம் நாளுக்கு நாள் 
அதிகரித்து கொண்டுதான் வருகிறதே தவிர குறைந்த பாடில்லை ..ஒரு குறிப்பிட இனத்தின் அடையாளமோ, 
அல்லது ஒரு நாட்டின் அடையாளமோ அவர்கள் அணியும் ஆடைகளை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம். 
இன்னும் சில நாடுகளில் அவர்களின் மரபுப்படி, பண்பாடுப்படி மட்டுமே ஆடை அணிந்து வருகின்றனர்.

 நமது தமிழர்களின் பண்பாடு நல்ல உடையணிந்து நாடு போற்ற வாழ்ந்தோம். நமது உடைகளை வெளிநாட்டினர் கூட விரும்பி அணிந்து 
கொண்டதை கண்கூடாய் காண முடிந்தது. இன்றைய வளரும் தலைமுறைகள் உடுத்தும் உடைகளை கண்டால் முகம் சுளிக்க வைக்கின்றது.
அந்த அளவுக்கு மட்டமான முறையில் உடையணிந்து வலம் வருகின்றனர். கேட்டால் நாகரிக வளர்ச்சி என்று கூறி மழுப்பி இருபாலரும் பிறந்த 
மேனியாய் வலம் வருவதை மாநகரங்களில் கண்கூடாக காணலாம். கொஞ்சம் முன்னேறி நகரம் கிராமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது இந்த உடை குறையும் கலாச்சாரம்!

தமிழையும் , தமிழர்களின் மரபுகளையும் அழிக்க வேறு எவரும் தேவையில்லை. தமிழனே அனைத்தையும் அழித்துவிடுவான் போலிருக்கின்றது. நெடுங்காலமாக மொழியை அழித்து வருகிறான், கூடவே இப்போ மரபுகளையும், பண்பாட்டையும்,  நவ நாகரிகம் என்ற சேற்றை கொண்டு பூசி வருகின்றான்.
இக்கால இளைய தலைமுறைகள் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர். அங்கு பலதரப்பட்ட பல்வேறு வகையான, பல மாநில, நாட்டு  மக்களின் தொடர்பும் எளிதில் கிட்டுகிறது. அந்த மக்கள் அணியும் ஆடைகள் சற்று வித்தியாசமாக கொஞ்சம் நாகரிகமாக??? இருப்பதால் அதை அணிய ஆரம்பித்து, அதையே தினமும் பின்பற்றி, வரும் தலைமுறைகளுக்கும் உதாரணமாய் இருக்கும் அவல நிலை கண்டு மனம் வெம்முகிறது. அப்புறம் முன்பை விட ஆடைக்கு அதிக விளம்பரம் கொடுத்து கவனத்தை ஈர்க்கின்றனர் வியாபார முதலாளிகள். இந்த படத்தில் இந்த நடி(கை)கன் அணிந்திருந்தது, அந்த படத்தில் அந்த நடி(கை) கன்  அணிந்திருந்தது என்று அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவே அதிக இளசுகள் விரும்பும் சூழல் இங்கு நிலவுகிறது. 

உடைகளின் விசயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடையினால் நம் கலாச்சாரம் அழிவது ஒரு புறம் இருக்கட்டும் அவர்களின் உறுத்தலான உடைகள் பலரின் கவனத்தை சிதைத்து தேவையற்ற விபரீதத்துக்கு ஆளாகும் சூழல் பெருகி வருகின்றது!
பெருகி வரும் கற்பழிப்பு கொலைகளுக்கு இதுவும் ஒரு அடிப்படை காரணமாக இருக்கும். முன் கூட்டி தடுக்காமல் பின்னர் வருந்துவது முட்டாள் தனம். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் இளம்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களே!
இது ஒருபுறம் இருக்க சில வீடுகளில் தமது குழந்தைகளை பெற்றவர்களே இந்த மாதிரி உடையணிய ஊக்கப்படுத்தும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நாகரிக வாசிகளை??? எப்படி திருத்துவது? புகழ் விரும்பிகளுக்கு புத்தியில் புகட்டுவது எப்போது... குறைந்த உடையில் பவனி வரும் பிள்ளைகளை குறை கூற முடியாது அதை அனுமதிக்கும் பெற்றோர்களை தான் தண்டிக்கணும்! 

நவ நாகரிக உடைகளை நான் முற்றிலும் குறை கூறி தள்ளி நிற்க நான் விரும்பவில்லை ... நாம் அணியும் உடை அடுத்தவரை உறுத்தாமல் இருந்தாலே போதும். பாதுகாப்பான உடைகள் நிறைய இருக்கின்றனவே! ஏன் இந்த பத்தும் பத்தாமல் உடை அணிய வேண்டும் பின்னர் இன்னல்களை சந்திக்க வேண்டும்! சில பள்ளிகள் இன்னும் குட்டை பாவாடை சீருடைகளை பயன் படுத்த சொல்லி கட்டாய படுத்துகின்றனர். சில காம கொடூரங்களின் பசிக்கு இரையாகி போகின்றன சில பூக்கள். இந்த மாதிரி உடைகளை பள்ளியும் மாற்றவேண்டும். அடுத்து நடிகைகள் திரையில் குறைப்பதை விட வெளி விழாக்களுக்கு வருகையில் மேலும் குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்திக்கொள்கின்றனர் என்பதை தெளிவாக புரிய வையுங்கள் பிள்ளைகளுக்கு. 
பல பிஞ்சுக்குழந்தைகள் பலாத்காரம் பண்ணி கொலை செய்யப்படுவதற்கு காரணம் அவர்களின் உடையாகவும் இருக்கலாம் அல்லவா? நித்தம் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதானே இருக்கின்றது இந்த கொடுஞ்செயல். சிந்தியுங்கள் தமிழ் உறவுகளே!

நாகரிக வளர்ச்சி, அவன்(ள்) அணிந்திருக்காங்க அதனால் நானும் அணிகிறேன், பணம், மாற்றம் விரும்புவது , சினிமா இப்படி ஆயிரம் காரணங்கள் கூறிச்சென்றாலும் வன்மையாக கண்டிக்கவே தோன்றுகிறது! 

"ஆடை அங்கத்தை 
மறைப்பதற்கு மட்டுமே 
அங்குல அங்குலமாய் 
காட்டுவதற்கு அல்ல"

நட்புடன் 

அரசன் 

Post Comment

ஜனவரி 02, 2012

கடைக்கண் பார்வையில...


உன் கட்டெறும்பு கண்ணால,
எட்டி நின்று பார்த்தாலும்,
வெட்டிரும்பா தேய்கிறேன்!
வேகாம சாகிறேன்!

கடையும் கடைக்கண் பார்வையால,
கனவுல மிதக்கிறேன்!
கற்பூரமா கரைகிறேன்!

அந்த சிக்கனச் சிரிப்புல,
சிற்பமா சிரிக்கிறேன்!
சிதைந்து தான் போகிறேன்!

உன் கரவளவி ஓசையில,
உறைந்து உருகுகிறேன்!
உடைந்தும் போகின்றேன்!

உன் மரிக்கொழுந்து கிறக்கத்துல,
மலைத்து நிற்கிறேன்!
மயக்குத்துல நடக்கிறேன்!

உன்னை பிரியும் வேளைகளில்,
பிணி வந்து சேருதடி,
பஞ்சா பறக்குதடி,
பாவிப்பய என்னுசுரு!

Post Comment