புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 23, 2012

நானும் எனது மண்ணும் ...




நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் கழனியின் நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி மாநகர மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உகந்த நாயகன் குடிக்காடு தான் எனது பிறப்பிடம்.



பொதுவாக அதிக பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமம், இப்போ கொஞ்சம் பேருந்து நடமாட்டம் உள்ளது. ஊரில் நான்கு கோவில் உள்ளது, ஆடி மாத அம்மன் திருவிழா எங்களுக்கு பெருவிழா. விவசாயம்தான் பிரதான தொழில், பிறகு கூலி வேலை. சில அந்நிய நாட்டுக்கு சென்று வரும் பறவைகளும் உள்ளது, பொருளாதார இரையை தேடி!



மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பித்தாலே நெஞ்சில் ஊற்றெடுக்கும் இன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை இந்த பிரபஞ்சத்தில்!
வாய்க்கால் நீரில் முகம் கழுவி, தூக்கு சட்டியில் இருக்கும் பழைய கம்மங்கஞ்சியை குடிச்சி எண்ணையில பொரிச்ச பச்ச மிளகா வை ஒரு கடி கடிச்சா உச்சியில ஏறும் அந்த சுவைய இதுவரைக்கும் யாரும் ஏட்டுல எழுதி வைக்கவில்லை, அப்படி ஒரு சுவை... என்னங்க பண்றது அதுவும் கரைஞ்சி போச்சு நாகரிக காற்றுல!


மழைக்கால நாட்கள் கிராமத்தில் இன்னும் ரம்மியமானது, தொடர்மழையாக இருப்பின் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பசங்களை ஓரிடத்தில் அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல! காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்! இன்று அதை நினைத்து பார்த்தாலும் நெஞ்சுக்குள் தேன்சுரக்கும் காலங்கள்!  



திருட்டு மாங்காய், புளியம்பிஞ்சு, நுங்கு, ஈச்சம்பழம், இலந்தை பழம், கூட்டாஞ்ச்சோறு, ஏரியில் கிடைக்கும் கிழங்கு இப்படி எதையும் விட்டுவைக்காமல் எல்லாத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது. இன்னும் ஒட்டிருக்கின்றன அந்த நிறைவான தருணங்களின் நிலைத்த வடுக்கள்! 

எல்லா பசங்களும் இணைந்து பொழுதுக்கும் விளையாண்டு பொழுது முடியும் பொது வீட்டுக்கு சென்றால் கிடைக்கும் பாருங்க முதுகுல பரிசு அதெல்லாம் சுகமான காலமுங்க! இப்பெல்லாம் எங்க ஊர்லையே நகரம் மாதிரி எல்லாம் தொலைக்காட்சிக்கு அடிமையா கிடக்குதுங்க புள்ளைங்க ... என்னத்த சொல்லுறது!


முடிவாக எங்க ஊர்ல எந்த விதையும் போட்டாலும் நல்லா விளையும் மண்ணுங்க... இப்போ கொஞ்சம் விவசாயம் பழுது அடைந்து போச்சுன்னு சொல்லலாம்! கொஞ்சம் நாகரிகம் எட்டிப்பார்த்தாலும் இன்னும் நான் என் இளம் வயதில் விழுந்து புரண்டு மகிழ்ந்த மண் அப்படியே இருக்கிறது என்பதில் மன நிறைவடைந்து விடைபெறுகிறேன்... நன்றி ...


என் மண்ணை பற்றி கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த அன்பின் தோழமை சசிகலா மேடம்(தென்றல்) அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்! 

சிட்டுக்குருவி எனக்களித்த அன்பின் விருது...

அன்பின் நண்பர் திரு. விமலன் சார் வழங்கிய அன்பு விருதுக்கு என் உள்ளம் நிறைந்த என் நன்றிகள்!

Post Comment

பிப்ரவரி 20, 2012

அவளோடு நனைந்த நினைவுகள்


மழைக்குப் பிந்திய 
நீர் புணர்ந்த 
மண் சாலையில்,
நிதானமாய் நடக்கிறேன். 
அவளோடு நனைந்த 
நினைவுகளை சுமந்தபடி!


Post Comment

பிப்ரவரி 16, 2012

அன்புக்கு நன்றி ...


அன்பின் தோழர் திரு. மதுமதி (தூரிகையின் தூறல்)அவர்கள் வழங்கிய விருது "Liebester Blog Award'

உங்களின் அன்புக்கும் , என் பதிவுகளின் வாசிப்புக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உங்களுக்கு இந்த தருணத்தில் உரித்தாக்கி கொள்கிறேன்!
உங்களின் இந்த விருதினால் இன்னும் பயணிக்கும் தூரம் நிறைய இருக்கின்றது
என்பதை உணர்த்துகிறது. சரியான திசையில் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது ... மீண்டும் ஒரு முறை என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் அன்பு தோழரே!

*******************************************************************************

அன்பு நண்பர் திரு. சேஷாத்ரி அவர்கள் வழங்கிய விருது "Versatile Award "

தோழமை கலந்த அன்போடு இந்த விருதை வழங்கியமைக்கும், எனது பதிவுகளின் வாசிப்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாகி கொள்கிறேன் தோழரே! விருதின் வீரியம் உணர்த்துகிறது என் படைப்புகளை தரமாய் வழங்க வேண்டுமென்று! நிச்சயம் அதை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்கின்றேன் தோழரே! நன்றி...

நான் விரும்பும் ஏழு விடயங்கள்:

* நல்ல நகைச்சுவைகளை ரசிப்பது 
* நண்பர்களோடு ஊர் சுற்றுவது
* எனது ஊரின் அழகை காமிராவில் பதிவு செய்வது 
* சன்னோலற பயணத்தில் மெல்லிசையை கேட்பது 
* ஊரில் சின்ன பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது..(நானும் சின்ன பையன்தான் )
* தனிமையில் நெடுந்தூரம் நடப்பது 
* சிறுபடைப்பாளர்களின் கவிதை புத்தகங்களை தேடி வாங்கி படிப்பது 

இந்த விருதினை நான் பகிர்ந்து கொள்ளவிரும்பும் நமது நண்பர்கள் :

நண்பர் திரு . சி. பிரேம் (! ! - கவிதைகள் - ! !)

அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் (குடந்தையூர்)

நண்பர் திரு. சிலம்பு (மாணவன்)

அண்ணன் திரு. சத்ரியன் (மனவிழி)

நண்பர் திரு. செய்தாலி (செய்தாலி)

Post Comment

பிப்ரவரி 13, 2012

உற்சாகம் ...


எந்திரமாய் ஓடியாடி 
வேலை முடிந்து 
சோர்ந்து வீடு திரும்பினேன்!
என்னவள் முறித்த 
ஒற்றை சோம்பலில் 
உலகமே சுறுசுறுப்பானது!

Post Comment

பிப்ரவரி 08, 2012

ஹைக்கூ ...

தேன் பருக அமர்ந்து 
ஏமாந்தது தேனீ 
"காகித பூக்கள்"

சிலிர்க்கும் தென்றல் 
எரிச்சலுடன் 
"தெருவோர மனிதன்"

குறுகிய வாழ்வு 
குதுகலித்தன குழந்தைகள்
"மரணித்தது வண்ணத்துப்பூச்சி"

நிறைந்த நட்சத்திரம்
கலையான நிலவு 
"வாட்டத்தில் விவசாயி"

பிறப்பின் பூரிப்பு
மரணத்தின் அழுத்தம் 
"மௌனமாய் மருத்துவமனை"


(முதன் முதலாக ஹைக்கூ புனைய முயன்றுள்ளேன் தவறுகள் 
இருப்பின் குட்டுங்கள் திருத்தி கொள்கிறேன்)  

Post Comment

பிப்ரவரி 03, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6



பிஞ்சு முந்திரி


பளபளக்கும் கள்ளி 


அரசமரம் 


சப்பாத்தி மலர்


பாசி நிறைந்த பயன்படுத்தா கிணறு 


முடக்கத்தான் மலரும், காயும் 


காளான் 


ஏரிகளில் பூக்கும் ஒரு வகை மலர்


இது ஒரு வகை கொடி

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment