கருவேலமுள்
தீண்டி உயிரை
துறந்த பலூனாய்,
கணப்பொழுதில்
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின்
ஒற்றை சொல்லில்!
நிதானித்து உதிர்த்த
வார்த்தை - நெஞ்சை
உளியாய் உரசுகின்றது!
உதிரம் உறைகின்றது!
வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை
அவளும் அறிந்திருக்க
வாய்ப்பில்லை...
வாய்ப்பில்லை...
Tweet |