புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 25, 2011

தீண்டும் மழைத்துளி...


நந்தவனச் சோலையில் 
விரிந்து சிரிக்கும் 
மலர்களின் மேல் 
விழுந்து உடையும் 
மழைத்துளிகளாய்  
என் பால்ய நினைவுகள்!

வானவில்லை பிடித்து  
சூரியனிடம் சுகம் 
விசாரித்த காலங்கள் 
சுருங்கிப் போயின!
குடும்ப வாழ்வின் 
பரிணாம கோடுகளில்! 

அன்று என்னை 
தீண்டி மகிழ்ந்த  
அதே மழைத்துளி 
தான் இன்றும்!

அன்று சாரலில் 
சிறகு விரித்த 
நான் தான் விரட்டி 
அனுப்புகிறேன் என் 
குழந்தைகளை!

நனைந்தால் சளி பிடிக்குமென்று!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

Post Comment

நவம்பர் 22, 2011

நான் இரசித்த பாடல் (4)....

படம் : எங்கேயும் எப்போதும் 

பாடல் : உன் பெயரே தெரியாது ...

இசை : திரு . சத்யா 

வரிகள் : திரு . நா. முத்துக்குமார்

இந்த பாடல் என்னை கொஞ்சம் அதிகம் கவர்ந்த பாடல் என்றே கூறுவேன். அடிக்கடி கேட்டும் சலிக்காத சமீபத்திய பாடல்களில் கட்டாயம் இதுவும் ஒன்று. ஆரம்பிக்கும் முதல் வரி முதல் முடியும் வரை ஒரு நெருக்கத்தை கூட்டும் வரிகளை இணைத்து பாடலுக்கு இனிமை சேர்த்திருப்பார் எளிமை கவிஞர். நா. முத்துக்குமார்.

ஆரம்பமே 

"உன் பெயரே தெரியாது.. உனை கூப்பிட முடியாது

நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..

அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..

அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்"..


மிக எளிமையான வரிகளை வைத்து, பெயர் அறிந்திடாத ஒருத்தனை எண்ணி பெண் பாடுவதாய் அமைந்திருக்கும் இந்த பாடலை இனிமை குறையாமல் அதன் வடிவம் மாறாமல் 
எதிர்பார்ப்பும் குறையாமல் நம்மை பாடலின் ஊடே பயணிக்க வைத்திருப்பார் எளிமை கவிஞர்.

"பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..சட்டென்று முடிந்ததே போகும், 
எப்படி சொல்வேன் நானும், மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?"

பெண்ணின் மனதை அப்படியே படம் படம்பிடித்து நம்மிடம் சுவையாய் வழங்கி கிறக்கத்தை உண்டு பண்ணிருப்பார் கவிஞர்... உதவி செய்த ஒருவனின் பெயரை கூட அறிந்து கொள்ளாமல் அவனை விட்டு பிரிந்த பின் பெண் உணரும் அந்த அவஸ்தையை, தவிப்பை மிக இயல்பாய் 
நறுக்கென்று வழங்கி உள்ளார் இந்த நளின கவிஞர்...

அடுத்து இந்த படத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தில் இதே போல் நல்ல பாடல்களும் உண்டு. என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல் தான். முதல் படம் மாதிரி அல்லாமல் இயக்குனர் திரு. சரவணன் ரொம்ப திறம்பட படத்தை முடித்து அதே நேரத்தில் விபத்தின் விளைவுகளை அவ்வளவு துல்லியமாய் மக்களுக்கு அழுத்தமாய் உணர்த்திய விதம் மிகச்சிறப்பு.

இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அற்புதமாய் தங்களது பாத்திரம் அறிந்து வாழ்ந்திருப்பார்கள். அஞ்சலி இந்த படத்தில் சற்று வித்தியாசமான பாத்திரத்தில் கச்சிதமாய் 
பொருந்தி இருந்தார் . அனன்யா சொல்லவே வேண்டாம் அஞ்சலிக்கு போட்டியாக நடித்திருந்தார் 
அதுவும் ஒரு புதுப் பெண் மாநகரங்களில் பயப்படும் நிலையை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தி மனதுக்குள் நுழைந்து விடுகிறார். அப்புறம் ஜெய் மற்றும் சர்வா இருவரும் நடிப்பில் தூள் பண்ணி இருப்பார்கள். 

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. வேல்ராஜ் அவர்களை பற்றி கூறியாகவேண்டும். நல்ல திறமையான ஒளிப்பதிவு. பேருந்து செல்லும் காட்சிகள் மற்றும் சென்னை , திருச்சி போன்ற இடங்களில் எடுத்த காட்சி அமைப்புகளை கண்டு வியந்து போனேன் ..மிரண்டும் போனேன்.

தனது கானக்குரலால் இனிமை கூட்டி வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் மதுஸ்ரீ அவர்களுக்கும், புதுமுகம் என்றாலும் பாடல்களும் சரி, பின்னணி இசையை சேர்த்திருக்கும் கவனத்திலும் மனதை கொள்ளை அடித்து செல்லும் திரு, சத்யா ..அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!


(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)

Post Comment

நவம்பர் 17, 2011

சிதையும் கலைத்தமிழ் ...



துல்லியத் தமிழை 
எள்ளி நகையாடி 
கிள்ளி தமிழாடினான்!

தலைவன் பேசுகிறான் 
என்று களித்து 
கலைகிறது இளந்தமிழ் ரத்தம்!

உரைக்க, உரக்கச் 
சொன்னாலும், உமிழ்ந்து 
வெளியேறி மகிழ்கிறது!

என்று உரைக்கும்?
என்று உணரும்? 
உணர்வின்றி உறங்கும் 
இந்த உயிர்களுக்கு???

Post Comment

நவம்பர் 04, 2011

அவளில்லாமல்!


மின்கம்பியில் சிக்கி 
கிழிந்து தொங்கும் 
காற்றாடியும், நானும் 
ஒன்றுதான்!
காற்றாடி நூலில்லாமல்! 
நான் அவளில்லாமல்!

Post Comment