புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 20, 2011

நகர வாழ்வு...



பாராமுகமெனினும் பாசமாய்


பகிர்ந்துண்ட நமக்கு
பழகிய முகமும்
பாராமுகமாய் போகின்றது
பாழும் நகர வாழ்வில்!

காலையில் சென்று
இரவில் கூடு
சேரும் பறவைகள்
மீண்டும் நாளைய
தேடலுக்கு ஆயத்தமாகும்!
மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!

முகமூடி அணிந்தே 
வாழும் முகங்கள்!
மனதை மறந்து 
பணத்தை துதிக்கும்
நாகரிக வாசிகள்!

கனவுகளை எண்ணி 
கண்ணீரை பருகும்
காசுக்காய் வாழும்
கசங்கிய உள்ளங்கள்!

சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும், நீரையும் 
காசு கொடுத்து 
வாங்க வேண்டிய 
கட்டாயங்கள்!

போலி புன்னகை 
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு 
பழகி விட்டது - பகட்டு 
நகர வாழ்வில்!

நேற்று தொலைத்த 
வசந்தங்களை இன்று 
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான் 
தேடுவதோ??? 

Post Comment

ஜூலை 14, 2011

குறுஞ்சுவைகள்...


நபர்1: முளைச்சு மூன்று இலை கூட விடல, 
அதுக்குள்ள பையன் இப்படி 
பண்ணிட்டானே!

நபர் 2 : என்ன பண்ணிட்டான்?

நபர் 1  : செடிய புடுங்கிட்டான்....

நபர் 2 :?????????!!!!!!!!!!!!!!!!!!!
 *********************************************************************************
ஆசிரியர்: பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார். 
இதை வினா வாக்கியமாக மாற்றுக.

மாணவன்: "பாரதி" யார் மனைவியுடன் திருச்சி சென்றார்?

ஆசிரியர்: நாசமா போச்சு....
 *********************************************************************************
பையன் : அப்பா நான் ஒரு செய்தி சொல்லணும்.
அப்பா: சாப்பிடும் பொது எதுவும் பேசக் கூடாது 
என்று எத்தனை முறை சொல்லுவது...
(சாப்பிட்டு முடித்து) இப்போ சொல்லு...

பையன்: ஒரு கரப்பான் பூச்சி உங்க 
சாப்பாட்டுல கிடந்தது...

அப்பா: !!!!!!!!?????????
 *********************************************************************************
பணக்காரன்: எனக்கு 5 கார், 4 வீடு, 
நிறைய பணம் வச்சிருக்கேன்... 
உன்கிட்ட என்ன இருக்கு?

விவசாயி: நான் ஒரே ஒரு பையன் வச்சிருக்கேன். 
அவனோட காதலி உன் பொண்ணு...

பணக்காரன்:!!!!!!?????
 *********************************************************************************
ஆசிரியர்: ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.

மாணவர்: எங்க வீட்லயும் ஒரு ரேடியோ காணாம 
போச்சு சார்... கண்டு பிடிச்சு கொடுப்பாரா சார்?

ஆசிரியர்: ?????
 *********************************************************************************
மு.க.அ: குங்குமப் பூ போண்டா னு ஒரு படம் 
வந்திருக்காம் போலாமா?

த.மா.: அது மாதிரி ஒரு படமும் வரலையே...

மு.க.அ.: ஏ அது நல்லா இருக்காம்பா.. 
அனிமேஷன் படமாம்..

த. மா. : (மனசுக்குள் அட நாறப்பயலே 
அது குங் பூ பான்டா... டா.)
 *********************************************************************************
தமிழ் அய்யா: தம்பி வாய்மை என்றால் என்ன ?

மாணவன்: வாய்மை என்றால் வந்து வந்து
"லிப்ஸ்டிக்" அய்யா...

அய்யா: நீ எங்க உருப்பட போற ...
 *********************************************************************************
ஆசிரியர்: ஓம் விதியை சொல்லு...

மாணவன்: எனக்கு தெரியாது சார் . ஆனால் 
கடைசி கொஞ்சம் மட்டும் நினைவில் இருக்கு ..

ஆசிரியர்: சரி தெரிஞ்சத சொல்லு ..

மாணவன்: ....................................இதைதான் 
ஓம் விதி என்று கூறுவர்..

ஆசிரியர்:????????????????
 *********************************************************************************
ஒரு வருசத்துக்கு முன்னாடி 
செம்மொழியான 
தமிழ் மொழியாம்...
இன்று கம்பிக்கு பின்னாடி 
கனிமொழியாம்...

(குறுஞ்செய்தியில் வந்த நகைச்சுவைகள்)

Post Comment

ஜூலை 11, 2011

செல்ல கருவாச்சியே!


(படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)

Post Comment