புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 29, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 11

பன ஓலை 


ஆமணக்கு மலர் 


முத்துச்சோளம்  


சோளத்தின் மீதுள்ள இழை  


கற்றாழை  


எறும்பின் ஊர்வலம்  


மலர்  


கார்த்திகை மொட்டு  


காட்டுப்பூ  


அடிக்கடி காணமல் போனாலும் கம்பம் அப்படியே தான் இருக்கு  


(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)

Post Comment

நவம்பர் 26, 2012

அம்மா இல்லா வீடு ...





அவசரமாய் சடை பிண்ணி 
அரைகுறையாய் ரிப்பன் கட்டி 
அரைகாத்து  சைக்கிளை 
மூச்சிறைக்க மிதித்து 
வந்தும் 
காலைக்கூட்டதை தவற விட்டமைக்கு 
கண்டிப்புடன் அடிக்கும் 
ஆசிரியருக்கு எப்படி 
புரிய வைப்பது 
அம்மா இல்லா வீட்டு வேலைகளை!

Post Comment

நவம்பர் 24, 2012

கதவிடுக்கு கண்கள்...



வெளிநாட்டிலிருந்த வந்திருந்த 
என்னை அழைத்து 
நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் 
உன் அப்பா!

உன்னை தேடிய என் கண்கள் 
கதவிடுக்கில் சிக்கிகொண்டன,
பின்புறம் நின்று கொண்டிருந்தாய்!

பிறகு 
கோயிலிலும், கொல்லைப்புறத்திலும் 
நான்கைந்து வார்த்தைகள் 
பேசியிருப்போம்! 

உள்ளத்து ஆசைகள் 
உன்னை சுழன்றாலும் 
வறுமை தொலைக்க 
வனவாசம் சென்றேன்!

மீண்டு வந்து காண்கையில் 
கனவுகளில் கல்லெறிந்த 
உன் அம்மா சொன்னாள் 
போன பங்குனியில தான் 
புள்ளைய கட்டிக்கொடுத்தொமென்று!

இருந்தும் கதவிடுக்கில் தேடும் 
கண்களை கட்டுப்படுத்த 
முடியவில்லை...

Post Comment

நவம்பர் 19, 2012

கூர்த்தீட்டும் காதுகள்


மிதமிஞ்சிய வேகத்தில் சென்ற 
வாகனமொன்றில் 
அடிபட்டு இறந்துபோனது 
நாயொன்று,
பாவம் 
பிறந்து இரண்டு நாட்களே ஆன 
அதன் குட்டிகள்!


========================================================================


கணவன் மனைவிக்குள் 
வாக்குவாதம்.
என்னவாயிருக்குமென்று 
கூர்த்தீட்டுகிறது  
பக்கத்து வீட்டு காதுகள்!

Post Comment

நவம்பர் 10, 2012

அனைவரும் சக மனிதர்களே! (உண்மை சம்பவம்)

சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு! அலுவலக வேலை நிமித்தமாக சில தகவல்களை நகல் எடுக்க வேண்டி இருந்தமையால் தகவல் தாட்களை ஓர் நகலத்தில் கொடுத்துவிட்டு, அருகில் கிடந்த தினசரியை புரட்டி கொண்டிருந்தேன், பின்னர் வந்த இரண்டு நண்பர்கள் காத்திருந்தார்கள் அவர்களும் நகல் எடுக்க வந்தவர்களாக இருக்க கூடும்! சிறிது நேரம் கழித்து வந்த இருவரில் ஒருவர்  இன்னொருவரிடம் கூறினார் அங்க பாரு மச்சான் ஒருத்தன் இந்த கம்மங்கஞ்சிய இப்படி குடிக்கிறானே, இவன் சத்தியமா பஞ்சத்தில் அடிபட்டவனாகத்தான் இருக்கும்.


அதற்கு இன்னொருவர் பதில், மச்சி அவன் தோற்றத்தை பார்த்தியா சத்தியமா இவன் ஒரு காட்டுபுறத்தான்  தான் அதான் இந்த வாங்கு வாங்குறான்! இப்படி தொடர்ந்தது அந்த நாகரிக? நண்பர்களின் உரையாடல்! என் வேலை முடிந்து நான் திரும்புகையில் நகலகத்தை சற்று தள்ளி வயதான பெண்மணி ஒருவர் தள்ளுவண்டியில் இரண்டு மண் பானையில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்! இருபதை கடந்த வாலிபர் ஒருவர் கூழ் குடித்துக்கொண்டிருந்தார், இவரை பற்றித்தான் அந்த இரு நவயுக கண்மணிகளும் உரையாடி களிப்புற்றது போலும்! அந்த வாலிபரும் பார்க்க கிராமத்திலிருந்து வந்தவர் போல் தான் காட்சி தந்தார், கசங்கிய உடை, எண்ணெய் தடவிய கேசம்! 

இந்த உலகத்தின் கரடு முரடுகளை பாருங்கள், ஒருவரின் செய்கையை கிண்டல் செய்து அதில் சுகம் காண்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்! பாவம் அவரிடம் பண பற்றாக்குறையாக இருக்கலாம், இல்லை அவர் விரும்பி அந்த உணவை அவர் உண்டிருக்கலாம், அதை இவ்வாறு கேளிபண்ணும் அந்த நவீன தோழர்களுக்கு எப்படி தெரியும் அந்த உணவு தான் உயிரை வளர்க்குமென்று!  அரை வேக்காட்டு உணவுகளை குளிர் அறையில் அமர்ந்து குதூகலாமாய் உண்பது சுகம் தான், வசதியை வெளிக்காட்டி நெஞ்சை நிமிர்த்தலாம், பாவம் அந்த உணவுகளில் ஆரோக்கியம் துளியும் இல்லை என்பதை எப்படி சொன்னாலும் ஏற்காது அந்த அரைவேக்காடு மனசுகள்! 

இந்த கம்பங்கஞ்சியை குடித்து தான் அவர்களின் முன்னோர் இல்லை முன்னோர்களின் முன்னோர் என்பது, தொண்ணூறு வரை உயிரோடு இருந்திருப்பர், இன்று காலம் மாறியதும் காட்சிகளும் மாறுகிறது, விருப்பம் இல்லையெனில் உதாசீன படுத்த வேண்டாமே! உன் விருப்பம் ஒன்றாக இருப்பின் இன்னொருவரின் விருப்பம் இன்னொன்றாக இருக்கும்! பணத்தை கொண்டு மனிதனை எடை போடாதிர்கள், மனத்தால் எடை போடுங்கள்! 

அவரும் சக மனித பிறப்பே! உங்களிடம் இருக்கும் பணம் அவரிடம் இல்லையென்பதால் மனித பிறப்பின்றி போகுமா? அந்த நிகழ்வு தான் என் தயக்கத்தை உடைத்தெறிந்தது! விருப்பம் இருந்தும் சில விடயங்களை இந்த மானங்கெட் "அடுத்தவன் கேலி பண்ணுவான் என்று செய்யாமல் நகர்ந்து கொண்டிருந்த நான் அதன் பிறகு என் விருப்பம் இதில் அடுத்தவர்கள் என்ன நினைத்தால் என்ன? நினைக்காமல் போனால் என்ன? என்று துணிந்து செய்து வருகிறேன்"   

முடிந்தவரை சக மனிதனை மதிப்போம், முடியவில்லையெனில் மிதிக்காமல் இருப்போம்!

Post Comment

நவம்பர் 08, 2012

செம்மண் தேவதை # 7 (Semman Devathai)



பெருங்கூட்டம் நிறைந்த 
பேருந்து அது
உனக்கான நிறுத்தத்தில் 
நீயொருத்தி இறங்கியதும் 
மொத்த பேருந்தும் 
வெறிச்சோடி போகிறது 
எனக்கு!

************************************************************************************************************

நீ கடித்த நெல்லிக்கனிகளை 
சேமிக்க 
காத்திருக்கின்றன 
எறும்பு கூட்டமொன்று 
என்னைப்போலவே!


Post Comment

நவம்பர் 06, 2012

ஊர்ப்பேச்சு # 6 ( Oor Pechu)

என்ன கனகசபை ஆளையே பாக்க முடியல, என்ன வெளியூருக்கு ஏதும் போயிருந்தியா?

ஆமா ரத்தினம், மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சி இந்த நேரத்துல எது வைச்சாலும் அப்படியே பொழைச்சிக்கும் அதான் தென்னம்பிள்ளை, தேக்கங்கிழங்கு வாங்கியாரலாமுன்னு ஒரு ரெண்டு நாளு சுத்தி வந்தேன்.



இங்கேதான் கொண்டாந்து விக்கிறாங்களே, இங்கயே வாங்கலாமே! நல்லாதான் இருக்குது .

இல்லை ரத்தினம் நம்ம நேரா போயி வாங்குற வசதி இங்க வந்து விக்குறவங்க கிட்ட இருக்காது. நம்ம மனசுக்கு புடிச்சத நேர்ல போனாத்தான் வாங்க முடியும், அதுமட்டுமில்ல வெலையும் கொஞ்சம் கம்மியா இருக்கும்.

சரி சரி, என்ன காடு பூரா மரமா போடுறதா உத்தேசமா? 

இல்ல கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம்னு இருக்கேன், போன வருசம் மேலக்காடு தவிர்த்து மீதி இருந்த ரெண்டு காணியிலும் தேக்கு , சவுக்கு போட்டுட்டேன். இந்த வருசம் மணக்காட்டுல கொஞ்சம் முந்திரி போடுலாமுன்னு பாக்குறேன், எப்படியும் மரம் வளர அஞ்சாறு வருசம் ஆவும், அதுவரைக்கும் கம்பு , சோளம், எள்ளு ஏதாவது போட்டுக்க வேண்டியது தான்!

நல்லா யோசிக்கிற கனகசபை. இருக்குறத விக்காம எப்படி பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படி பண்ணிட்டு வர. 

வேற என்ன பண்றது ரத்தினம், இருக்குறத வித்துபுட்டு சோத்துக்கு எங்க போறது. உக்காந்து தின்னமுன்னா மலையும் போறாது! விவசாயம் படுத்துகிச்சு இப்படி ஏதாவது வருமானத்துக்கு வழி தேடனுமில்ல!



ஆமாம். வீட்டுக்கு பின்னாடி இருக்குற ரெண்டு வீசத்துல கொஞ்சம் காய், கீரை போடலாம்னு இருக்கேன் ரத்தினம்! உரம் போடாம, பூச்சி மருந்து அடிக்காம வளர்த்து வெளையவைக்கும் காய்கறிகளுக்கு டவுனுல மவுசாம்! மத்த காய்கள விட இதுக்கு அம்பது, நூறு  கூட கொடுத்து நம்ம வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறாங்க கடைக்காரங்க!

இது என்னய்யா புதுசா இருக்கு, பரவாயில்லையே கனகசபை. 

இதுக்கு பேரு ஆர்கானிக் காய்கறி! இயற்கை உரங்களை பயன்படுத்தி உருவாக்கும் காய் , கீரை , அரிசிகளுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்குறாங்க பணக்காரங்க. எப்படியோ மீண்டும் மக்கள் இயற்கை தான் உன்னதமுன்னு உணர ஆரம்பிச்சி இருக்காங்க , நல்லது தானே! அப்புறம் பாக்கலாம் ரத்தினம்!

நேரம் இருப்பின் இதையும் படிக்கலாமே:


Post Comment

நவம்பர் 03, 2012

ஏதோ சொல்லனும்னு தோணுச்சி ....


எந்த நேரத்தில் வெளிய கிளம்பி வந்தேனோ தெரியலைங்க, நான் பாட்டுக்கு (ஹெட் போன்ல பாட்டுக்கேட்டுக்கொண்டு அப்படி வந்தாதான் யூத்துன்னு சொல்றாங்க) என் வழியில வந்தேன், எதிரே ஒரு நல்ல முறையில் உடையணிந்த ஒரு ஜென்டில் மென் வந்து தம்பி நீங்க சென்னையா ? என்றார். இல்லை என்றேன்! 


அப்போ என் கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டு நான் நேற்று ஒரு கம்பெனிக்கு இன்டர்வியுக்கு ஊர்ல இருந்து சென்னை வந்தேன், முடித்து பஸ்ல கோயம்பேடு போயிட்டு இருக்கும் போது என் பர்ஸ் தொலைஞ்சு போச்சு, நீங்க ஒரு சின்ன உதவி பண்ணனும், நான் ஊருக்கு போக ஒரு நூறு ரூபாய் தேவை படுது, நீங்க கொடுத்திங்க என்றால் புண்ணியமா போகும். கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று அவர் கெஞ்சியதும் சட்டென்று பையில் விட்டு நூறு ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்!(பெரிய வள்ளல்னு நெனப்பா, ஓவரா படம் காட்டாத தம்பி விசயத்தை சொல்லு)

எனது வேலைகளை முடித்து எனது அறைக்கு திரும்பி கொண்டிருந்தேன், வழியில் ஒரு நபர் உற்சாக பானம் அருந்திய மகிழ்வில் சாக்கடை ஓரம் அமர்ந்து  தியானம் பண்ணிகொண்டிருந்தார், சற்று கவனித்து பார்த்தேன் என்னிடம் காலையில் பணம் கேட்டு மன்றாடிய அதே ஜென்டில் மென் தான் இப்படி ஒரு ஆராதனை பண்ணி கொண்டிருந்தார்! சட்டையை பிடிச்சு நாலு வார்த்தை திட்டனும் என்று தோன்றியது பிறகு எதற்கு நமக்கு இந்த வேலை, பணம் கொடுத்து ஏமாந்தது நாம், இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நடையை தொடர்ந்தேன்.( பணத்தை கொடுத்து பல்ப் வாங்கிட்டு, பேச்ச பாரு பெரிய பாகவதர் கணக்கா!) 

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், நான் சென்னையை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளும் முன் (இந்த ஆறு வருடத்தில் இன்னும் சென்னையை பற்றிய முழு அறிவு இல்லை என்பது தான் உண்மை! அதற்காக சென்னையை குறை சொல்ல முடியாது, பிழைப்புக்காக சென்னை வரும் சில மனிதர்களால் மொத்த சென்னை வாசிகளுக்கும் அவப்பெயர் வந்துவிடுகிறது) நடந்த நிகழ்வு! பிறகு சில விடயங்களை கேட்டும், அனுபவமாக உணர்ந்தும் எப்படி இருக்கணும், இருக்க கூடாது என்பதை பழகிக்கொண்டேன்! (இது ரொம்ப முக்கியம், இப்ப என்னதான் சொல்ல வர)

ஆகவே உங்களோட நட்புகள் யாரவது புதிதாக ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு முன்னரே இருப்பவரிடம் நல்லது கெட்டதுகளை அறிந்து கொண்டு செல்ல சொல்லுங்கள், உங்களுக்கு அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! (யப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டான், இந்த அல்ட்ரா சிட்டியில இந்த மொக்கை பதிவு தேவையா?)

Post Comment

நவம்பர் 01, 2012

களவு போன கடவுள் ...


சுமை கூடியதால் 
வழக்கத்திற்கு மாறாக 
புகை கக்கியபடி நகர்கிறது 
நகரப்பேருந்து!

ங்கிலத்தில் உரையாடி 
ஆர்ப்பாட்டமாய் கடக்கிறது  
முகங்களை மூடிய 
இளம்பெண்கள் கூட்டமொன்று!

குடித்த தேநீருக்கு 
காசு கொடுக்காமல் சென்றவனை 
வசை பாடிக்கொண்டே 
பாலில் தண்ணீர் கலந்து 
கொண்டிருந்தார் கடைக்காரர்!

விரைந்து வரும் வாகனங்களை  
சில மணித்துளிகள் 
ஆசுவாச படுத்த 
நேரம் கொடுத்துக்கொண்டிருந்தார்  
போக்குவரத்து காவலர்!

முகம் மறைத்த தாடியுடன் 
எங்கேயோ பார்த்து 
ஏதோ பேசிக்கொண்டிருந்தார் 
ஒரு முதியவர்!

டுங்கிய குரலில் 
நான்கு வரிகள் பாட,
விழுந்த சில்லறைகளை 
தடவி எண்ணினாள்
பார்வையிழந்த சிறுமி!

வசரமாய் சென்ற ஆம்புலன்சில் 
அடிபட்டு இறந்த 
நாயை வட்டமிடுகின்றன 
அதன் குட்டிகள் பசியுடன்!

றுப்புகளை உருவகப்படுத்தும் 
உடையணிந்த மங்கையை 
மானபங்க படுத்திக்கொண்டிருந்தன 
சில மன்மத பார்வைகள்!

கேட்டதும் வாங்கி கொடுக்கவில்லையென்று 
முகத்தை இறுக்கமாய்
வைத்துக்கொண்டு வேறங்கோ
நோட்டமிட்டது,
தாயிடம் கோபித்துக்கொண்ட 
குழந்தை!


த்தனை நிகழ்வுகளையும் 
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 
கடவுள், 
சற்றுமுன் 
களவு போனாராம்!





Post Comment