ஆசை...
உன் உதட்டு ரேகைகளில்
ஒன்றாக மாறிவிடவும் ஆசை ...
கோபம்...
நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...
சந்தேகம்...
அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???
பொறாமை...
பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...
Tweet |