புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 07, 2011

நான் இரசித்த பாடல் (3)....

படம் : சண்டக்கோழி 

பாடல் : தாவணி போட்ட ..

இசை : யுவன்ஷங்கர் ராஜா 

வரிகள் : கவிஞர். யுகபாரதி 

ஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்க மனம் தூண்டும் அந்த வகையில் என்னை கவர்ந்த பாடல் இதுவும் ஒன்று. கேட்டாலே காதலில் நம்மையும் விழ வைக்கும் அப்படியொரு அழகிய வரிகள் வழங்கி அசத்தி இருக்கின்றார் கவிஞர். யுகபாரதி. 

"தாவணி போட்ட தீபாவளி 
வந்தது என் வீட்டுக்கு 
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு " 



ஆரம்பமே அதிரடியாய் வரிகளை தொகுத்து சரவெடியாய் வெடித்து நம்மை உள்ளே கூட்டிச்செல்லும் வித்தை இவருக்கு நன்றாகவே வந்துள்ளது.

"பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்க்கமா 
பச்ச தண்ணி நீ கொடுத்த ஆகிப்போகும் தீர்த்தமா"

"மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே 
நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே!"

இயல்பான வரிகளை இணைத்து பாடலின் சுவையையும் தரத்தையும் ஒருசேர மெருகேற்றி இருக்கின்றார் கவிஞர்.  அதே வேளையில் காதலர்களை பற்றி மிக ரம்மியமாய் அழகிய சொற்களை சேர்த்து காதலின் ஆழத்தையும் , அழகையும் அற்புதமாய் செதுக்கி வைத்துள்ளார் இந்த காதல் மனிதர்.

"கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே!
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே!"

இப்படி பெண் பாடுவதாய் அமைத்து பெண்ணின் கோணத்தில் இருந்து காதலின்
நெருக்கத்தையும், நேசத்தையும் நிறைவாய் கூறி இருக்கின்றார்.

"தேக்கு மர சன்னல் நீ தேவ லோக மின்னல் 
ஈச்ச மர தொட்டில் நீ எலந்த பழ கட்டில் 
அருந்த வாலு, குறும்பு தேளு 
ஆனாலும் நீ ஏஞ்சலு!"



இயற்கையாய் வந்து விழுந்த வார்த்தைகளை தொடுத்து அழகிய காதல் மாலை 
தொடுத்து நம்மிடம் ரசிக்க கொடுத்துள்ளார். இப்பாடலை கேட்டு முடித்த பின் நெஞ்சுக்கூட்டில் காதல் ஊற்று சுரக்கும் அப்படி ஒரு அழகிய காதல் வர்ணனை.

சலிப்பு தட்டா வண்ணம் இயல்பான மெல்லிசை அமைத்து இவ்வரிகளின் சுவையை மேலும் கூட்டி, பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டி இருக்கின்றார் இசை அரசரின் வாரிசு திரு. யுவன் ஷங்கர் ராஜா. 

அற்புத வரிகளுக்கு அம்சமான குரல்களால் உயிர் கொடுத்திருப்பர் திரு. விஜய் யேசுதாஸ் மற்றும் திருமதி. சிரேயா கோஷல். இவர்களின் குரல்வளம் இந்த பாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்.

சிறப்பான நடிப்பினால் உள்ளத்தை கொள்ளை கொள்வார்கள் விஷாலும் , நாயகி மீரா ஜாஸ்மினும். இந்த பாடலில் மீராவின் அழகும் , துள்ளலான துல்லிய நடிப்பும் நவரசத்தை கூட்டும்.

அற்புத காட்சி அமைப்புகள் , நல்லதொரு வசனங்கள் என்று மொத்த படத்தையும் தரம் குறையாமல் நமக்கு வழங்கி இருப்பார் இயக்குனர் திரு. லிங்குசாமி. அனைவரின் ரசணைக்கும் ஏற்றார் போல் அழகிய பாடல்களும், காட்சிகளும் நிறைந்த தரமான படம் இது.

எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!

(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)

Post Comment

37 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது பகிர்ந்தமைக்கு நன்றி தொடருங்கள் வாழ்த்துக்கள் அரசன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஆஹா எனக்கும் மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி..
பாராட்டுகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான பாடல் மக்கா....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே!"
//

சூப்பர்...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!//


எனக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் மக்கா...

காந்தி பனங்கூர் சொன்னது…

அருமையான வரிகள். பாடியிருப்பவர்களும் அவ்வளவு இனிமையா பாடியிருப்பாங்க. பகிர்வுக்கு நன்றி.

thendralsaravanan சொன்னது…

பாடலின் இனிமை தங்களின் விமர்ச்சனத்தால் கூடுகிறது!
வாழ்த்துக்கள் தம்பி!

ஆமினா சொன்னது…

ஒரு கலக்கு கலக்கின பாடல்......

எனக்கும் ரொம்ப பிடிக்கும்

ஆமினா சொன்னது…

கிராமிய வார்த்தைகள் மணக்கும் பாடல்.........

பாலா சொன்னது…

உண்மையிலேயே நல்ல பாடல். விஜய் ஏசுதாசின் குரல் அருமையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

நிலாமதி சொன்னது…

உண்மை தான அழகான ரசனையுள்ள பாடல். நல்ல தேர்வு.

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய பாடல்த் தெரிவும் அதற்குரிய நல்ல விளக்கமும் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .........

அம்பாளடியாள் சொன்னது…

தமிழ்மணம் 4

மாணவன் சொன்னது…

இனிமையான பாடலை அழகான ரசனையுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

பெயரில்லா சொன்னது…

ஆம் இனிப்பான பாடலும் அருமை வரிகளும். காதல் சுரக்கும் ..சுரக்கும் காதிலே கேட்டால்.. உண்மை. நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

சிசு சொன்னது…

நல்ல பாடல்.
மயக்கும் மாலைப்பொழுது இந்தப் பாடல் கேட்பதற்கான பொருத்தமான தருணம் என்பது என் கருத்து.

போளூர் தயாநிதி சொன்னது…

சிறப்பான பாடல்வரிகள் நல்லதேர்வு இது போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவத இருக்கிறது பாராட்டுகள் நன்றி.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமையான பாடல்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது பகிர்ந்தமைக்கு நன்றி தொடருங்கள் வாழ்த்துக்கள் அரசன்
//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ஆஹா எனக்கும் மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி..
பாராட்டுகள்..
//

மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
அருமையான பாடல் மக்கா....!!!//

நன்றிங்க மனோ சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே!"
//

சூப்பர்...!
//

இந்த வரிகள் நெஞ்சத்தை அள்ளி செல்லும்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!//


எனக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் மக்கா...//

இந்த காதல் வந்தாலே இப்படிதான் சார்

arasan சொன்னது…

காந்தி பனங்கூர் கூறியது...
அருமையான வரிகள். பாடியிருப்பவர்களும் அவ்வளவு இனிமையா பாடியிருப்பாங்க. பகிர்வுக்கு நன்றி.//

உண்மைதான் அண்ணே ..
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
பாடலின் இனிமை தங்களின் விமர்ச்சனத்தால் கூடுகிறது!
வாழ்த்துக்கள் தம்பி!//

அன்பின் அக்காவின் வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
ஒரு கலக்கு கலக்கின பாடல்......

எனக்கும் ரொம்ப பிடிக்கும்//

உண்மைதான் மேடம்

arasan சொன்னது…

ஆமினா கூறியது...
கிராமிய வார்த்தைகள் மணக்கும் பாடல்.........//

ரசனை மிகுந்த வார்த்தைகள் அதிகம் புரளும் பாடல் ..
நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

பாலா கூறியது...
உண்மையிலேயே நல்ல பாடல். விஜய் ஏசுதாசின் குரல் அருமையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.//

அவரின் குரலே தனி தான் நண்பரே ..
மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

நிலாமதி கூறியது...
உண்மை தான அழகான ரசனையுள்ள பாடல். நல்ல தேர்வு.//

உண்மைதான் அக்கா
மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
அழகிய பாடல்த் தெரிவும் அதற்குரிய நல்ல விளக்கமும் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .........//

மிக்க நன்றிங்க சகோ

arasan சொன்னது…

அம்பாளடியாள் கூறியது...
தமிழ்மணம் 4//

வாக்குக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோ

arasan சொன்னது…

மாணவன் கூறியது...
இனிமையான பாடலை அழகான ரசனையுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!//

நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

kovaikkavi கூறியது...
ஆம் இனிப்பான பாடலும் அருமை வரிகளும். காதல் சுரக்கும் ..சுரக்கும் காதிலே கேட்டால்.. உண்மை. நன்றி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

சிசு கூறியது...
நல்ல பாடல்.
மயக்கும் மாலைப்பொழுது இந்தப் பாடல் கேட்பதற்கான பொருத்தமான தருணம் என்பது என் கருத்து.//

என்னங்க சிசு நீண்ட நாட்களா ஆளையே காணலை ..
மிக சரியான நேரம்தான் ...
நெஞ்சம் பறக்கும்

arasan சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
சிறப்பான பாடல்வரிகள் நல்லதேர்வு இது போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவத இருக்கிறது பாராட்டுகள் நன்றி.//

அன்புக்கு நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் கூறியது...
அருமையான பாடல்//

உங்களுக்கு தகுந்த பாடல் தான் நண்பரே

Samantha சொன்னது…

me too like this song..nice post :)