புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 20, 2013

எச்சில் முத்தங்கள்...


உதிரிகள் போல் 
சிதறி கிடக்கும் அவனின்  
நினைவுகளை 
கோர்த்துக்கொண்டிருக்கிறேன் 
நெடிய நரம்பொன்றில்,

"முதலிரவு" கழிந்த 
நான்காம் நாளிரவில் 
விமானம் ஏறியவன்,
இரண்டு வருடம் தொலைத்து, 
இன்றிரவு வருகிறானாம்!

கனவுகளை நனவாக்கி, 
ஏக்கங்களை சுமையேற்றி, 
வண்டி ஏறப் போவதாய் 
அலைபேசி வழி அழுது 
துண்டித்தான்!

செல்லும் அவசரத்தில் 
கடித்து காயப்படுத்திய,
உதட்டு தழும்போடு 
காத்திருக்கிறேன் 
அவன் தரும், 
எச்சில் முத்தங்களை சு(ம)வைக்க! 


Post Comment

11 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

பின்றேள்....

கார்த்திக் சரவணன் சொன்னது…

கலக்கல்...

aavee சொன்னது…

ரெண்டு வருஷமா இன்னும் ஆறலையா.. ச்சே.. செம்ம.. அறுவைக் கவிஞனல்ல நான் அரசவைக் கவிஞன் என்று அரசன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.. நாலு லைன்ல டுபாக்கூர் கவிதைகள் எழுதறவங்கேல்லாம் உஷாரா இருங்க..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பர்...!

Unknown சொன்னது…

காக்க வைப்பதில் சுகமில்லை ,துக்கம்தான் ,அதுதான் சுகத்திற்கு பதிலாய் சுமையாய் மாறி விடுகிறது !
த.ம +1

ராஜி சொன்னது…

எத்தனை நாள் லிவ்ன்னு முதல்லியே சொல்லிடறது பெட்டர்.

Seeni சொன்னது…

ppppaaaa arumainga...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பிரிவின் ஏக்கத்தை பிரமாதமாய் சொல்லியது கவிதை! வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

இரண்டு வருடம் விட்டுட்டு ஏங்க போறான்?? அவனுக்காக ஏங்கவேற செய்யறாங்களே...
கவிதை நல்லா இருக்கு அரசன்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை....