புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 27, 2013

உன் இரகசிய அழகினை !


கொடியில் நீ 
தொங்கவிட்டுப் போன உந்தனாடைகள்,
உன் பேரழகையும், பெருந்திமிரையும்
பேசியபடி இருக்கின்றன ,
நீர்ச்சொட்டுகளாக!



உன் வீட்டு ,
மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் 
மற்றத் துணிகளோடு 
சேர்ந்து வந்துவிட்ட 
உந்தன் உள்ளாடையொன்று 
காற்றில் கசிந்துக் கொண்டிருக்கிறது 
உன் இரகசிய அழகினை !

Post Comment

27 கருத்துரைகள்..:

aavee சொன்னது…

ஏம்பா, அப்பவே சொன்னாங்க, முகநூல் பக்கம் வராதீங்கன்னு.. இப்போ பாரு கண்ணா பின்னான்னு கற்பனை செய்யுற மாதிரி ஆயிடுச்சி.. சாமி சரணம்!

சீனு சொன்னது…

யோவ்... என்ன மாதிரி சின்ன பையன் படிக்கிற மாதிரி கவிதை எழுதவும்...

இல்லையென்றால் 18+ என்று போடவும்.. மீ பாவம்.. மீ இன்னொசென்ட் :-))))))))))

பால கணேஷ் சொன்னது…

Katril kasinthu kondirukkirathu - or - katril kasiya vittu kondirukkirathu - ethu sari brother? anyway... enjoyable two kavithais! superb!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ம்ஹீம்... மனசே சரியில்லை...!

ரூபக் ராம் சொன்னது…

உங்க வீட்டு சன்னல் கதவு ஏன் எப்பவும் திறந்தே இருக்குன்னு இப்ப புரியுது

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதையின் வரிகள் மனதில்....ஒரு கசப்புத்தன்மையை உண்டாகியது.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி சொன்னது…

அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி பொண்ணு தேடச் சொல்லனும் போல!?

ராஜி சொன்னது…

அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி பொண்ணு தேடச் சொல்லனும் போல!?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இன்னும் கல்யாணம் நடக்கலைன்னு கன்பார்ம் ஆயிடுச்சு.
தனபாலன் சார் மனசையும் கெடுத்துட்டியே ராசா
வாத்தியார் கணேஷ் சொன்னது போல தமிழில் கொஞ்சம் கவனம் தேவை.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

என்னவொரு ரசனை! என்ஜாய்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இன்னும் கல்யாணம் நடக்கலைன்னு கன்பார்ம் ஆயிடுச்சு.

கார்த்திக் சரவணன் சொன்னது…

சீக்கிரம் இந்த ஆளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அடுத்த கவிதையை எதிர்பார்க்கிறேன்...
(இதுவும் நல்லாயிருக்குது...)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஓகே.... சீக்கிரமா இவரை மாட்டி விடுங்கப்பா.......

arasan சொன்னது…

கோவை ஆவி கூறியது...
ஏம்பா, அப்பவே சொன்னாங்க, முகநூல் பக்கம் வராதீங்கன்னு.. இப்போ பாரு கண்ணா பின்னான்னு கற்பனை செய்யுற மாதிரி ஆயிடுச்சி.. சாமி சரணம்!//

சாமி நான் ஒன்னும் பண்ணலையே

arasan சொன்னது…

சீனு கூறியது...
யோவ்... என்ன மாதிரி சின்ன பையன் படிக்கிற மாதிரி கவிதை எழுதவும்...

இல்லையென்றால் 18+ என்று போடவும்.. மீ பாவம்.. மீ இன்னொசென்ட் :-))))))))))//

யாரு நீ இன்னோசன்ட்டு ?

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
Katril kasinthu kondirukkirathu - or - katril kasiya vittu kondirukkirathu - ethu sari brother? anyway... enjoyable two kavithais! superb!//

கசிய விட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .. புத்தகத்தில் மாற்றிக் கொள்ளலாம் சார்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
ம்ஹீம்... மனசே சரியில்லை...!// என்னாச்சி சார்

arasan சொன்னது…

ரூபக் ராம் கூறியது...
உங்க வீட்டு சன்னல் கதவு ஏன் எப்பவும் திறந்தே இருக்குன்னு இப்ப புரியுது// யோவ் ஏன்யா இப்படி கெளப்புறீங்க

arasan சொன்னது…

2008rupan கூறியது...
வணக்கம்
கவிதையின் வரிகள் மனதில்....ஒரு கசப்புத்தன்மையை உண்டாகியது.....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

ஏன் நண்பரே ? கசப்புத்தன்மைக்கான காரணம் கூற இயலுமா ?

arasan சொன்னது…

ராஜி கூறியது...
அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி பொண்ணு தேடச் சொல்லனும் போல!?//

இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் அக்கா

arasan சொன்னது…

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று கூறியது...
இன்னும் கல்யாணம் நடக்கலைன்னு கன்பார்ம் ஆயிடுச்சு.
தனபாலன் சார் மனசையும் கெடுத்துட்டியே ராசா
வாத்தியார் கணேஷ் சொன்னது போல தமிழில் கொஞ்சம் கவனம் தேவை. //

உங்க கிட்ட சொல்லாமலா நடக்கும் ..
தனபாலன் சாருக்கு என்ன ஆச்சின்னு தெரியலை சார் .. கணேஷ் சார் சொன்னதை மனசில் வைத்துக்கொண்டேன் சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
என்னவொரு ரசனை! என்ஜாய்!//

நன்றிங்க சுரேஷ் அண்ணே

arasan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் கூறியது...
இன்னும் கல்யாணம் நடக்கலைன்னு கன்பார்ம் ஆயிடுச்சு.//

இன்னும் ஆகலை சார்

arasan சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
சீக்கிரம் இந்த ஆளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்..//

அதை செய்யுங்க முதலில் புண்ணியமா போகும்

arasan சொன்னது…

NIZAMUDEEN கூறியது...
அடுத்த கவிதையை எதிர்பார்க்கிறேன்...
(இதுவும் நல்லாயிருக்குது...)//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
ஓகே.... சீக்கிரமா இவரை மாட்டி விடுங்கப்பா.......//

ஹா ஹா .. நன்றிங்க சார்