புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 11, 2013

ஏக்கப் பெரு வலி!


அவளைப்பற்றி எழுதிட
அமர்கையில்,
மழை ஓய்ந்த
வானம் போலாகிறேன்!



எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!

இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில் 
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

மீண்டும்
அதே ஏக்கப் பெரு வலி!
உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!

தலை கவிழ்ந்த படி
அவளிடம் சொன்னேன்,
தலையை நிமிர்த்தி
சிரித்துவிட்டு செல்கிறாள்!

இதற்கு 
திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், 
அந்த நொடியே மறந்திருப்பேன்!


Post Comment

24 கருத்துரைகள்..:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஹாஹா அருமை சகோ

ராஜி சொன்னது…

எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!
>>
வேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்...

ராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

எப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .
அதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!//

அடடா.....

கவாட்டர் - என்ன ஐடியா?

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

என்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்

என்னுடைய வலைத்தள முகவரி
https://2008rupan.wordpress.com
தொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Seeni சொன்னது…

ஹா ஹா..
நல்ல கவிதை.

உழவன் சொன்னது…

காதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..

aavee சொன்னது…

Poruththamaana title nanbaa. Asaththal. Raji akka sonna idea try panni paarungalen. ;-)

சீனு சொன்னது…

இப்படியோ

இதற்கு
திட்டிவிட்டே சென்றிருக்கலாம்
அந்த நொடியே மறந்திருப்பேன்!

அல்லது

இப்படியோ

இதற்கு
திட்டிவிட்டே சென்றிருக்கலாம்
அந்த நொடியே மறந்திருப்பேன் - நானும்
அவள் கொடுத்த
ஏக்கப் பெருவலியை

படித்துப் பார்த்தேன்

//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))

r.v.saravanan சொன்னது…

இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

அந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே

மகேந்திரன் சொன்னது…

எழுதுவதற்கு
வரவில்லை வரவில்லை
என்று சொல்லி
காதல் காவியமே
படைக்கிறீர்கள் தம்பி...

arasan சொன்னது…

கிரேஸ் கூறியது...
ஹாஹா அருமை சகோ//

நன்றிங்க

arasan சொன்னது…

ராஜி கூறியது...
எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!
>>
வேணுமின்னா ஒரு குவார்ட்டர் அடிச்சு பாரேன்.//

இன்னும் அந்த அளவுக்கு வளர்ச்சி இல்லைங்க அக்கா ... 90 தான் தாங்குது

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சிரமம் தான்...

ராஜி சகோதரி ஆலோசனை - யம்மாடி...!//
அக்காவோட ஆலோசனை
மயக்கம் வருதில்ல சார்

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
எப்படி எல்லாம் ஐடியா சொல்றாங்க .
அதுக்கென்ன திட்ட சொல்லிட்டா போச்சு.//

ஹா ஹா ஆர்வம் தான் சார்

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
// உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!//

அடடா.....

கவாட்டர் - என்ன ஐடியா?//

அக்கா டெரரா ஐடியா கொடுக்குறாங்க ..

arasan சொன்னது…

2008rupan கூறியது...
வணக்கம்
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

என்ன வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கவிதை அருமை வாழ்த்துக்கள்

என்னுடைய வலைத்தள முகவரி
https://2008rupan.wordpress.com
தொலைவில் இருந்து ஒரு குரல் என்ற தலைப்பில் கவிதை உள்ளது.... அன்புடன் வாருங்கள் வாருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

நன்றிங்க ரூபன்

arasan சொன்னது…

Seeni கூறியது...
ஹா ஹா..
நல்ல கவிதை.//

நன்றி நண்பா

arasan சொன்னது…

Uzhavan Raja கூறியது...
காதல்ல எந்த விசயத்தையும் உடனே மறந்திட கூடாதுல அதனால என்னமோ சிரிச்சுட்டு போய்டாங்க...அண்ணா..//

இருக்கலாம் தம்பி

arasan சொன்னது…


பிளாகர் கோவை ஆவி கூறியது...
Poruththamaana title nanbaa. Asaththal. Raji akka sonna idea try panni paarungalen. ;-)//

அய்யயோ நான் வரல ஆட்டத்துக்கு

arasan சொன்னது…

//திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், // இந்த வரியில் வரும் அவள் மட்டும் ஒட்டவில்லை, அவளை வாசகனிடம் கொடுத்து விடுங்கள்... மற்றபடி கவிதை அருமையோ அருமை :-))))//

யோவ் அவளை வாசகர்களிடம் கொடுத்துவிட்டு நான் என்ன பண்றது ? திருத்தம் எனக்கும் சரியாகத்தான் படுகிறது தல ...

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில்
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

அந்த வார்த்தைகள் இன்னும் எழுத ஊக்கம் கொடுதிருக்குமே//

நிச்சயமாக சார்

arasan சொன்னது…

மகேந்திரன் கூறியது...
எழுதுவதற்கு
வரவில்லை வரவில்லை
என்று சொல்லி
காதல் காவியமே
படைக்கிறீர்கள் தம்பி...//

அய்யயோ இதெல்லாம் சின்ன சின்ன கிறுக்கல்கள் தானே அண்ணே ..