புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 14, 2014

வெள்ளமொன்றில்...



கோடு சேரா 
கோலப் புள்ளிகளைப் போல
தனித்தே இருக்கின்றன,
அந்த ஏகாந்த நினைவுகள்!

வேண்டாமென்று விலக்கி,
ஆறு முடிந்து 
ஏழாம் வருடம் துவங்கி 
ஒன்பது நாட்களாகிறது!

அனல் வெயில்,
தொடர் மழை 
இதில் ஏதாவதொன்று 
உணர்த்திக் கொண்டிருக்கிறது
அந்த கிறக்கச் சுவையை!

பெருமழைக்கு முந்திய 
இடியொன்றில் சாயாமல்,
பிந்திய 
சிறு வெள்ளமொன்றில் 
கரைந்து போகவே காத்திருக்கிறேன்!










Post Comment

9 கருத்துரைகள்..:

Kasthuri Rengan சொன்னது…

தம இரண்டு
யார் அது
கொஞ்சம் சோகம் இழையோடுகிறதே ...

மகிழ்நிறை சொன்னது…

இதுவும் கடந்து போகட்டும்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ம்ம்ம்ம்ம்.

த.ம. +1

KILLERGEE Devakottai சொன்னது…


ஏன் நண்பா சோகம் ?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேண்டாம் என்று விலக்கியதை நினைத்துக் கூட பார்க்க வேண்டாம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 4

மகேந்திரன் சொன்னது…

அழியாத கோலங்கள் தான் தம்பி...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஏனப்பா சோகம்! ம்ம்ம்ம்...என்றாலும் ரசித்தோம் உங்கள் எழுத்தை!