புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 08, 2015

காமத்துளிகள்...




கூட்டமிகுந்த 
ஷேர் ஆட்டோவொன்றில் 
நெருக்கமாய் அமர்ந்திருந்த மங்கையின்
மார்பிளவில் 
பிறந்திருக்க வேண்டும் 
என் ஞானத்தின் முதல் துளி!

சிலநாள் கழிந்து, 
ஒரு முன்னிரவில்
கடற்கரை காதலர்களின் 
நெருக்கத்தில் துளிர்த்திருக்குமென்று  
நம்புகிறேன், 
இரண்டாம்துளி ஞானம்!

பிறகொரு நாள்,
மாநகர கழிவறையொன்றில்  
"விந்தை" பீய்ச்சியடித்துவிட்டு 
அவசரமாய் வெளியேறிய 
அந்த வயசாளியின்,
மோகத்தூண்டிலினை எண்ணி 
மோதிப் பிறந்திருக்கும் மூன்றாம் துளி!

இரவுப் பயணத்தில்  
தன் சிறுத்த மார்பகங்களை
தடவத் துவங்கி,
பிசைந்து கொண்டிருப்பவனுக்கு
இசைந்து கொண்டிருக்கும் 
பருத்த உடல்க் காரியின்
உடல் மொழியில் உதிர்ந்திருக்கலாம்  
நான்காம் துளி ஞானம்! 

நினைவு நீட்சிகளில் 
திறந்த மேனித்  தேவதைகள்,
சமைந்த 
சதைத் திரட்சிகளைக் கொண்டு 
விருந்திட முனைகையில் 
உடைப்பெடுத்து ஓடத் துவங்குகிறது,  
தடுப்புகளற்ற என் ஞானத் துளிகள்!  

காமம் எப்போது 
ஞானமாகியது என்ற குழப்பத்தில் 
வழியும் வியர்வையை துடைத்துவிட்டு 
திரும்பிப் படுக்கிறேன்,
களைந்த உடைகளை தரித்துக் கொண்டிருக்கிறது
 "ஞானமெனும் பேய்" 

Post Comment

1 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தீவிர இலக்கியவாதி ஆகிட்டீங்க போலிருக்கு! ஹாஹா!