புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 29, 2015

அது பூனையில்லையாம் ...





சென்ற வாரம்  கூட சென்றிருந்தேன்,
அப்போது அது அங்கில்லை,
புதிய வரவென்று நினைக்கிறேன்,
கொழுத்த உடற்கட்டு,
வசீகரமான முகம்,
மூக்கினை தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற
தவிப்பினை ஏதோ ஒன்று தடுத்தது!
பார்க்கிறேன் என்று தெரிந்தும்,
ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு
சன்னலுக்கு வெளியே முகத்தை திருப்பிக் கொண்டது!
அதன் பிறகு,
அதைப் பார்க்க கூடாது என்றெண்ணி
ஆறேழு முறை பார்த்துவிட்டேன்!
வழக்கமாய் ரெண்டொரு வார்த்தைகள்
பேசிச் செல்லும் தோழியின் அப்பா
இன்று ஏனோ என்னிடம் பேசாமல் போனது
வருத்தமாக இல்லையென்றாலும்
சங்கடமாக இருந்தது!
தேநீர் கொடுக்க வந்த தோழியின் அம்மா
சன்னலோரம் அமர்ந்திருந்த அதைப் பார்த்து
புன்னகைத்தது அழகாக இருந்தது!
குளித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்ற தோழி
சரியாக நாற்பத்தியேழு நிமிடங்கள் கழிந்து வந்தாள்!
பொலிவான முகம்
மலிவான ஒப்பனைகளினால்
சிவந்திருந்தது!
பூசிய நறுமணத்தோடு
சோப்பின் வாசமும் நாசியை நெரிக்க
வந்து அமர்ந்த தோழியைப் பார்த்து
எப்போதுலிருந்து பூனை வளர்க்கிறீர்கள் என்று
கேட்டதும்,
கூடத்தை கடந்த
அவளின் அம்மா  நின்று என்னை முறைக்க,
அப்பா நகைத்துக் கொண்டே உள் சென்றார்!
என் கிட்டுவை, பூனையென்று எப்படி சொல்லலாம் என்று
திட்ட ஆரம்பித்த தோழியை கண்டு கொள்ளாமல்
வெளியேற கிளம்புகையில்
அந்தப் பூனை ஓடிவந்து,
வாஞ்சையுடன்
என் காலுக்குள் புகுந்து வெளியேறியது!



  

Post Comment

3 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


ரசித்தேன் நண்பரே,,,
தமிழ் மணம் 1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லாருக்கு அரசன்...அதானே அதை எப்படி பூனை என்று சொல்லலாம்!!!??

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ரசிக்க வைத்த கவிதை! பாராட்டுக்கள்!