புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 07, 2011

எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...

எங்கள் கிராமத்தில் படிப்பின் பெருமையை அறிந்திடாத மக்கள் அதிகம் இருந்தனர் இன்னும் இருக்கின்றனர். அவர்களும் படித்ததில்லை, பிள்ளைகளை படிக்க வைப்பதிலும்  ஆர்வம் காட்டுவதில்லை. பிள்ளைகளும் ஆர்வமாய் படிப்பதில்லை.


பொது தேர்வு வரை செல்லாத மாணவர்கள்தான் அதிகம். இடையிடையே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வதே வழக்காமாய் இருந்து வந்தது.மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் படிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.இப்பொழுது தான் படிப்பின் அருமை தெரிய  ஆரம்பிதிருக்கின்றது. வெளியே நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள் என்றுதான் எண்ண தோன்றுகிறது. 


இருள் சூழ்ந்த நிலையில் இவர்கள் தான் சிறு சிறு நட்சத்திரங்களாக மின்ன ஆரம்பித்து இருக்கின்றார்கள், இனி கவலை இல்லை வரும் தலைமுறைகளுக்கும் இவர்கள் ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


கடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் இதுவரை கிடைத்திடாத ஒரு பெரும் வெற்றியை எங்கள் ஊரில் பிள்ளைகள் பெற்று பெற்றவர்களுக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.இதை கூறுவதற்கு என்ன காரணம் என்றால் ஒரு சில மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் ஒரு சிறிய அரசு பள்ளியிலே பயின்று வென்றவர்கள்.மற்ற பள்ளிகளை போல் சிறப்பு பயிற்சிமுறை இல்லை, அதிக சிறப்பு வகுப்புகள் இல்லை.. இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். கடின உழைப்பை கொண்டு சாதித்து காட்டிய எம் மண்ணின் மைந்தர்களை நட்புக்களாகிய நீங்களும் வாழ்த்துங்கள்.....





    1 ) தி. தமிழ் அருவி - 464 
கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிக்கிறார்.

2 ) மே. மணியரசி - 446

3 ) த. சுபலட்சுமி - 424 

4 ) ரா. பூவரசி - 418 

5 ) சு. நீலமணிவண்ணன் - 413 

6 ) சா. பாக்கியராசு - 397 

7 ) மா. தமிழ் நிலா - 335 

8 ) கொ. பாலமுருகன் - 296

9 ) நா. இளையராசா - 264

10 ) வீ. திருமுருகன் - 253

11 ) கோ. செல்வகுமார் - 233  


12 ) தி. பாலமுருகன் - 207




Post Comment

41 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…

சாதித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் பாஸ்

சிவகுமாரன் சொன்னது…

லட்சம் லட்சமாய் செலவழித்து நாமக்கல் , ராசிபுரம் போன்ற பள்ளிகளில் படித்த மாணவர்கள் மதிப்பெண் குறைந்திருக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஏழ்மை சூழ்நிலையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

rajamelaiyur சொன்னது…

Vazhthukal

Collections 4 U சொன்னது…

Best Wishes

thendralsaravanan சொன்னது…

கிராமத்துக் களை கட்டும் சிட்டுக்கள் சாதித்தது வாழ்த்தக்கூடிய விசயம்.இவர்கள்தான் முதலில் படிக்க வேண்டும்.சாதிக்க வேண்டும்.
என்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து விடுங்கள்!

விஜய் சொன்னது…

இந்த மாதிரி ஊக்கங்கள் கண்டிப்பாக தேவை.

உங்கள் முயற்ச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

விஜய்

Prem S சொன்னது…

ungal voor patru therikrathu anparae ov vore variyilum .congrats

ஹேமா சொன்னது…

எதிர்காலச் செல்வங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறையப் படிச்சு முன்னுக்கு வரணும்ன்னு கேட்டுக்கிறேன் !

அன்புடன் நான் சொன்னது…

நம் தரிசு மண்ணின் கரிசல் பூக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Vijay jay சொன்னது…

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

போளூர் தயாநிதி சொன்னது…

இன்றைய சூழலில் அடிமைமுறை கல்வியான ஆங்கில வழிக்கல்வி தன் சிறந்தது என தவறான எண்ணம் கொள்ளப்பட்டு உள்ளது ஆனால் இந்த ஊர்ப்புறத்து குழந்தைகள்தான் சிறந்த கல்வியறிவு பெற்று இந்த சமுகத்தை தங்கும் தூண்களாக விளங்கு கிறார்கள் அதுமட்டுமல்ல இந்த தமிழ்வழியில் அல்லது தய்வழிகல்வி பெரும் குழந்தைகள் தான் சிறந்த எதிர்காலத்தை தருகிறார்கள் பதிவுக்கும் தேர்வு பெற்ற மாணவர்களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் எமது வாழ்த்துகளும் .

தூயவனின் அடிமை சொன்னது…

என்னுடைய வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவிக்கவும். நம் நாட்டின் அஸ்திவாரம் கிராமம் தான்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/2.html

கடம்பவன குயில் சொன்னது…

சாதித்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். நகர்ப்புறத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனியே 3லிருந்து 4 ஆயிரங்கள்வரை செலவழித்து சிறப்பு வகுப்பு வைத்தாலும் இந்த மதிப்பெண் வாங்க மாணவர்கள் திணருகிறார்கள். அரசுபள்ளியிலே சிறப்பு வகுப்புக்கு (தனி டியுசன்) போகாமல் இவ்வளவு மதிப்பெண் வாங்கும் இவர்கள்தான் உண்மையான திறமையான மாணவர்கள்.
தங்களின் பணியும் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே

vithu சொன்னது…

சாதித்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் சொன்னது…

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.. கிராமத்தினையும் சேர்த்து பாராடுகிறேன்.

ரிஷபன் சொன்னது…

’இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’!
சாதித்த பிள்ளைகள் சாதிக்கப் போகும் வருங்காலப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகி விட்டார்கள்..
மனப் பூர்வமான வாழ்த்துகள்..

r.v.saravanan சொன்னது…

அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

வருங்காலம் அவர்களுக்கு வளமாய் அமைய வும் வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

மைந்தன் சிவா சொன்னது…
சாதித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் பாஸ்//

நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
லட்சம் லட்சமாய் செலவழித்து நாமக்கல் , ராசிபுரம் போன்ற பள்ளிகளில் படித்த மாணவர்கள் மதிப்பெண் குறைந்திருக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஏழ்மை சூழ்நிலையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.//

எனக்கும் ஆச்சரியம் தான் நண்பரே,..
அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை ..
வாழ்த்க்கு மிக்க நன்றிங்க நண்பா

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…
Vazhthukal//

நன்றிங்க

arasan சொன்னது…

Collections 4 U சொன்னது…
Best Wishes//

thanks a lot boss

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
கிராமத்துக் களை கட்டும் சிட்டுக்கள் சாதித்தது வாழ்த்தக்கூடிய விசயம்.இவர்கள்தான் முதலில் படிக்க வேண்டும்.சாதிக்க வேண்டும்.
என்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து விடுங்கள்!//

நிச்சயம் தங்களின் அன்பான வாழ்த்துகளை அவர்களிடம் மறவாமல் சேர்த்துவிடுகிறேன் ..அக்கா ..

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
இந்த மாதிரி ஊக்கங்கள் கண்டிப்பாக தேவை.

உங்கள் முயற்ச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றிங்க சார்..
இந்த எண்ணத்தை என்னுள் தூண்டிவிட்டது அன்புடன் நான் கருணாகரசு அவர்கள் தான் ...
அவரையே சாரும் இந்த வாழ்த்துக்கள் ....

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
ungal voor patru therikrathu anparae ov vore variyilum .congrats//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
எதிர்காலச் செல்வங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பு வாழ்த்துகள்.இன்னும் இன்னும் நிறையப் படிச்சு முன்னுக்கு வரணும்ன்னு கேட்டுக்கிறேன் !//

நம் அனைவரின் ஆவலும் அதே தான் ..
உணரட்டும் வெல்லட்டும் ...
மிக்க நன்றிங்க மேடம் ...

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
நம் தரிசு மண்ணின் கரிசல் பூக்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க மாமா .. இந்த மாதிரி எண்ணத்தை என்னுள் விதைத்து
அவர்களின் வெற்றியை பாராட்ட வாய்ப்பு கொடுத்தமைக்கு ...
நிச்சயம் அவர்கள் வாழ்வில் சிறக்க உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் ...

arasan சொன்னது…

Vijay jay சொன்னது…
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்//

அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தல ..

arasan சொன்னது…

Vijay jay சொன்னது…
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்//

அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தல ..

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..//

மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
இன்றைய சூழலில் அடிமைமுறை கல்வியான ஆங்கில வழிக்கல்வி தன் சிறந்தது என தவறான எண்ணம் கொள்ளப்பட்டு உள்ளது ஆனால் இந்த ஊர்ப்புறத்து குழந்தைகள்தான் சிறந்த கல்வியறிவு பெற்று இந்த சமுகத்தை தங்கும் தூண்களாக விளங்கு கிறார்கள் அதுமட்டுமல்ல இந்த தமிழ்வழியில் அல்லது தய்வழிகல்வி பெரும் குழந்தைகள் தான் சிறந்த எதிர்காலத்தை தருகிறார்கள் பதிவுக்கும் தேர்வு பெற்ற மாணவர்களுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் எமது வாழ்த்துகளும் .//


நிறைவான வாழ்த்துக்களை வழங்கி வெற்றி செல்வங்களுக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு அன்பு நன்றிகள் ..

arasan சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
என்னுடைய வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவிக்கவும். நம் நாட்டின் அஸ்திவாரம் கிராமம் தான்.//

நிச்சயம் வாழ்த்துக்களை சேர்த்துவிடுகிறேன் இளம் தூயவரே ..

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.//

வந்துவிடுகிறேன் அம்மா ...

arasan சொன்னது…

கடம்பவன குயில் சொன்னது…
சாதித்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். நகர்ப்புறத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிதனியே 3லிருந்து 4 ஆயிரங்கள்வரை செலவழித்து சிறப்பு வகுப்பு வைத்தாலும் இந்த மதிப்பெண் வாங்க மாணவர்கள் திணருகிறார்கள். அரசுபள்ளியிலே சிறப்பு வகுப்புக்கு (தனி டியுசன்) போகாமல் இவ்வளவு மதிப்பெண் வாங்கும் இவர்கள்தான் உண்மையான திறமையான மாணவர்கள்.
தங்களின் பணியும் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே//

இந்த மாதிரி பணத்தை தண்ணீர் மாதிரி செலவழித்து
படிக்க வைத்தாலும் படிப்பு ஏறவில்லை ..

இவர்களின் சாதனைக்கு மிக பெரிய வணக்கம் போடுவோம் /
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

vithu சொன்னது…
சாதித்த மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

மதுரை சரவணன் சொன்னது…
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.. கிராமத்தினையும் சேர்த்து பாராடுகிறேன்...//

மிக்க நன்றிங்க சார்...

arasan சொன்னது…

ரிஷபன் சொன்னது…
’இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’!
சாதித்த பிள்ளைகள் சாதிக்கப் போகும் வருங்காலப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகி விட்டார்கள்..
மனப் பூர்வமான வாழ்த்துகள்..//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

வருங்காலம் அவர்களுக்கு வளமாய் அமைய வும் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சார்,..

arasan சொன்னது…

உலக சினிமா ரசிகன் சொன்னது…
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//

varugiren

பெயரில்லா சொன்னது…

முதலில் உங்களுக்கு பாராட்டுகள் ,,,,,,,,

நீங்க கொடுக்குற இந்த வாழ்த்து அந்த பிள்ளை களுக்கு எவ்ளோ யுர்ச்சகத்தை ஏற்படுத்தி இருக்கும் ...
ஆல் தி பெஸ்ட் குட்டீஸ் ......