புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 22, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் ...


நான் படித்தது ச்சே நான் பள்ளிக்கு சென்றது தமிழ் வழிக்கல்வி பள்ளிக்கு தான் எனது ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி நத்தக்குழி.அங்கு தான் வித்தியாசமான மனிதர்களை? உலகத்தை காண முடிந்தது...ஒருத்தர் பெரிய மீசையும் , நரைத்த தலையுமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எல்லா பிள்ளைகளையும் வலது கையை எடுத்து தலைக்கு மேல் சுழற்றி இடது காதை தொடச்சொன்னார். தொட்டுவிட்டால் போதும் அந்த பிள்ளை ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி அடைந்து விட்டான். இப்போ உள்ள சூழலை நினைத்து பார்க்கும் போது வயிறு எரிகின்றது. அன்று நானும் சுழற்றி காதை தொட்டுவிட்டதால் என் பெயரையும் , அப்பா பெயரையும் கேட்டார் சொன்னதும் கையை நீட்டி ஒரு இடத்தில அமர சொல்லிவிட்டார். அப்பாவும் புன்னகையோடு சென்று விட்டார். சிக்கியது நான் தானே!

அப்புறம் எல்லா பசங்களுக்கும் மிட்டாய் கொடுத்தாங்க. சிலது அழுவும், சிலது சிரிக்கும், நான் இரண்டுக்கும் இடைப்பட்டு மிரண்டு தான் கிடந்தேன் ..மெல்ல மெல்ல எல்லாமே பழக்கமாச்சு. புது உலகத்திற்கு பழக்கமானேன் ..முதல் வகுப்பு ஆசிரியர் திரு. மருத முத்து என்னை செதுக்கிய முதல் சிற்பி. பிறகு இரண்டாம் வகுப்பு என்னை தட்டி கொடுத்து கொடுத்தே சொல்லி கொடுத்த திருமதி. ராசகுமாரி இவங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலம் ஆரம்பித்தது என்னை மிரட்டிய மீசை ஆசிரியர் திரு. பிச்சை பிள்ளை . அடி கொடுப்பதில் செம கில்லாடி ..இவரிடமும் கொஞ்சம் தப்பித்து வந்தாச்சு. அடுத்து திரு. கோவிந்தராசு இவரிடம் பயின்ற நான்காம் வகுப்பு தான் செம ஜாலி! நான்காம் வகுப்பு போனதே தெரியவில்லை அந்த அளவுக்கு பாடங்களை சொல்லியும் தருவார், கிள்ளியும் தொலைப்பார்!



அடுத்து தான் பெரிய பயமே வந்துச்சு. மேலே சொன்னேனே அந்த நரைச்ச முடி மனிதர் திரு. சாமுண்டி ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர். இவர் தான் படிப்பின் தேவையை உணர வைக்கக் முயன்றார். நாங்க கேட்டோமா? இல்லையே. எப்படியோ ஒரு வழியா தொடக்கப்பள்ளி முடித்து நல்ல பெயருடன்?! வெளி வந்தாச்சு! அடுத்து வீட்ல விடுதியில சேர்த்துவிடலாம் என்று முடிவு பண்ணி நல்ல பள்ளியா தேடி கிடைக்காம போனதுனால ஊரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ள செந்துறை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க! என்னை சுமந்த மற்றுமொரு கருவறை. ஆறிலிருந்து எட்டுவரை நல்லா போச்சுங்க. சைக்கிள் அந்த அளவுக்கு ஓட்ட வராது என்பதினால் அதே பள்ளியில் படித்த எங்க ஊர் அண்ணன் ஜெயராஜ் என்பவருடன் செல்வேன். அவர்தான் சைக்கிள் மிதிப்பார் என்னை உட்கார வைத்து! நல்லா தான் போச்சு புது இடம் , புது அனுபவம்! புது கனவுகள்! எதுவுமே தெரியாம தான் போறது வரது. ஆனால் லீவு மட்டும் போடுறது இல்ல!





ஆறும் , ஏழும் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு மகிழ்வான நாட்கள்.
ஊரிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் இரண்டு நாவல் மரங்கள் இருக்கும். சீசன் நேரத்தில் பசங்க கூட்டம் களை கட்டும் மரத்திற்கடியில்! வெள்ளை சட்டை வேறா எல்லாம் கரையா போய்டும் வீட்டுல வாங்குற அடிக்கு மறு நாள் போக கூடாது என்று முடிவு பண்ணி இருந்தாலும் மரத்தை நெருங்கியதும் மனசு மாறி மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறும்! மீண்டும் முதுகு வீங்கும்! ஏழின் நடுவில் பெண்களுக்கென தனியாக பள்ளி ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பள்ளி தான், இடையில் மூங்கில் படல் வைத்து பிரித்து விட்டார்கள் மனசே இல்லாத நய வஞ்சகர்கள்!? 


(பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு )
(என்னை சுமந்த மண்)


எட்டாம் வகுப்பு படிக்கையிலே நானே சைக்கிள் ஓட்டி வருவேன். இந்த நேரத்தில் தான் நான் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். தமிழ் மன்றதேர்வில் முதல் மாணவனாய் வந்து பாரதியார் மற்றும் பாரதி தாசன் கவிதை புத்தகங்களை திருமதி. மணிமேகலை (தமிழ் ஆசிரியை) அவர்களின் கையால் பரிசாக பெற்றது, காலையும், மாலையும் டியுசன் செல்ல ஆரம்பித்தது இந்த எட்டில் தான்.




(டியுசன் சென்டரில் நண்பர்கள்)


ஒன்பது சென்றதே தெரியவில்லைங்க அவ்வளவு வேகம். நல்லா போச்சுங்க. பத்து வந்துச்சி பைத்தியம் புடிச்சிடுச்சி. என்னத்த சொல்றதுங்க நின்னா படி நடந்தா படி, படி தான் . டியுசன் பின்னி பெடலேடுத்துட்டாங்க மிஸ்ஸும் சாரும். எப்படியோ பள்ளி பொது தேர்வு நெருங்கியாச்சு. இரவு நேர வகுப்பு வரவேண்டும் என்று கட்டாயம். என்ன பண்ணுவது எப்படியோ மட்டம் தட்டினாலும் ஒரு நாள் மட்டியாச்சி. ஒரு நாள் சிங்கம் சிக்கிடுச்சி. அன்னைக்கு சிங்கம் வாங்கிய அடிய ஆயுசு முழுதும் மறக்காது. அப்படி ஒரு அடி. ஒரு வழியா பத்தும் ஒரளவு நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சியும் ஆகியாச்சு. இந்த நேரத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாய் எனது டியுசன் ஆசிரியர்கள் திருமதி . மலர்விழி மற்றும் அவர்களின் கணவர் திரு. ராஜவேல் இவர்களுக்கு என் நன்றிகளை கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்.

(பள்ளியின் நடுப்பகுதியில் சுதந்திர தின நினைவு சின்னம்)



அப்புறம் அதே பள்ளியில் பதினொன்று மற்றும் பனிரெண்டு. நான் எந்த லட்சணத்தில் பள்ளிக்கு போனேன் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. பதினொன்று அரையாண்டு தேர்வு முடிந்து பிறகு ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் திரு. செல்வ விநாயகம் என்னை பார்த்து தம்பி நீ என்ன நியூ அட்மிசன் ஆ என்று கேட்டார். அந்த மாதிரி பள்ளிக்கு சென்று வந்திருக்கின்றேன். அப்படி ஒரு ஆர்வம் படிப்பில். இந்த கால கட்டங்களில் எங்களின் வாழ்வே ஒரு நந்தவனமாய் இருந்தது. எப்போதும் அரட்டை தான். நண்பன் ஒருவன் ஆசிரியை ஒருவரிடம் பிட்டு அடித்து மாட்டிக்கொண்டு அதை சமாளிக்க அவன் மயக்கம் வருவதாய் நடித்து எங்களின் வயிற்றை புண்ணாக்கினான். அப்படி ஒரு சந்தோஷம் அந்த நாட்களில். எப்படியோ சில பல ரவுடிசங்களை செய்து முடித்து ஒரு வழியாய் பனிரென்டையும் முடிச்சி பள்ளியை விடு வெளியே வந்தேங்க. இதுதான் என்னோட சுருக்கம்.


(பள்ளி மைதானத்தில் நண்பர்கள்)


இந்த நேரத்தில் இந்த கல்லையும் ஒரு கலைநயமிக்க சிலையாய்  செதுக்க முயற்சித்த என் ஆசான்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.


என் நினைவுகளை பின்னோக்கி சுழல வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த  தோழி. கலை (கிராமத்துக் கருவாச்சி) க்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.

Post Comment

38 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

பள்ளி கூட வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது என்பதை முன்னிறுத்தும் பதிவு வாழ்த்துக்கள் அரசன் எனக்கு கூட என் பள்ளியை பற்றி எழுதும் ஆசை வருகிறது

செய்தாலி சொன்னது…

பால்யமும்
பள்ளி வாழ்க்கையும்
எல்லாவறையும் வருடிச் செல்லும்
இறைவனின் வரப் பிரசாதம்

அன்புத் தோழமையின்
பால்யமும் பள்ளி வாழ்கையும்
வாசித்து உணர்த்தேன்

அருமை நண்பா

Prem S சொன்னது…

உங்கள் பள்ளிக்கு சென்றது போல் ஓர் உணர்வு அருமை

rajamelaiyur சொன்னது…

அருமையான நினைவலை பதிவு

rajamelaiyur சொன்னது…

இன்று ...

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

vimalanperali சொன்னது…

படித்த பள்ளிக்கு உங்களது மனம் இன்னும் விடுமுறை விடவில்லை.

பெயரில்லா சொன்னது…

அருமையான நினைவலைகள் அரசன்...ரசித்தேன்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மலர்ந்த நினைவலைகளுக்குப் பாராட்டுக்கள்...

உழவன் சொன்னது…

பள்ளிகூட வாழ்க்கை நினைவலைகள் மிகவும் அருமை நண்பா...
நமது இலந்தபழத்தை விட்டுவிட்டாயே நண்பா ..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நன்றிங்க அடிமை என்னை மதிச்சி ungada palli அன்பவத்தை பகிர்ந்தமைக்கு

பெயரில்லா சொன்னது…

படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். தமிழ் மன்றதேர்வில் முதல் மாணவனாய் வந்து//////////////////////

கேட்டுகோங்க நண்பர்களே அரசன் ரொம்ப படிப்பிஸ் ஆம் ...ம்ஹும்ம்ம்மம்ம்ம்ம் ...

இப்புடிலாம் சொன்னா நாங்க நம்பிடுவமக்கும்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

அரசன் நல்லத் திட்டிப் போடதிங்க ...சொல்லிடுறேன் ...என்னோட டேம்ப்ளடே கமென்ட் உங்களுக்காக ...

சுப்பரா இருக்கு அரசன் பதிவு

சத்ரியன் சொன்னது…

படிக்கப் படிக்க என் பள்ளி நாட்களைப் புரட்ட ஆரம்பித்து விட்டது மனசு.

பால்யத்தின் சேட்டை பகிர்வுக்கு நன்றிங்க அரசன்.

thendralsaravanan சொன்னது…

வாராதா வாராதா ....பள்ளி நாட்கள் மறுபடியும்!ம்ம்ம்ம்....... நான் அமைதியாத் தானே இருந்தேன் அப்புறம் எப்படி இந்த பயலுங்களுட்ட மாட்டிகிட்டேன் மறுபடியும் பள்ளி நாட்களை தொடர ஆசிரியராக!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பள்ளி நாட்களை நினைக்கும் போது உள்ளம மிகவும் உவகை கொள்கிறது இல்லையா, வாழ்த்துக்கள் அரசன்....!!!

சசிகலா சொன்னது…

அப்புறம் எல்லா பசங்களுக்கும் மிட்டாய் கொடுத்தாங்க. சிலது அழுவும், சிலது சிரிக்கும், நான் இரண்டுக்கும் இடைப்பட்டு மிரண்டு தான் கிடந்தேன் ..மெல்ல மெல்ல எல்லாமே பழக்கமாச்சு. //மிட்டாய் வாங்கிக்கிட்டு மிரள விழித்தீர்களா ?
தாமத வருகைக்கு மன்னிக்கவும் பள்ளி நாட்களை படங்களுடன் அருமையாக பதிவாக்கிய விதம் அருமை .

யசோதா காந்த் சொன்னது…

மீண்டும் பள்ளிகூடதிற்கு சென்று வந்தாகி விட்டது ...அருமை ..ஒவ்வொருவருக்கும் பள்ளிக்கூடத்தை பற்றிய சுவையான நினைவுகள் உண்டு ...எனக்கும் இப்பொழுது ஞாபகத்தில்..நன்றி அரசன் சே அவர்களே ..
யசோதா காந்த்

ஹேமா சொன்னது…

ரசனையோடு சொன்ன விதம் சில இடங்களில் சிரிக்கவும் வைத்தது அரசன்.அந்தக் காலங்கள் மீண்டும் கைக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்.அதுவும் அந்த முண்டாசு கட்டின வாத்தியார் வரணும் !

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

நன்றாக இருந்தது தங்களின் பதிவு!

-காரஞ்சன்(சேஷ்)

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
பள்ளி கூட வாழ்க்கை என்பது எவ்வளவு இனிமையானது என்பதை முன்னிறுத்தும் பதிவு வாழ்த்துக்கள் அரசன் எனக்கு கூட என் பள்ளியை பற்றி எழுதும் ஆசை வருகிற//

மிகவும் நன்றிங்க சார்

arasan சொன்னது…

செய்தாலி கூறியது...
பால்யமும்
பள்ளி வாழ்க்கையும்
எல்லாவறையும் வருடிச் செல்லும்
இறைவனின் வரப் பிரசாதம்

அன்புத் தோழமையின்
பால்யமும் பள்ளி வாழ்கையும்
வாசித்து உணர்த்தேன்

அருமை நண்பா//

அன்பின் கருத்துக்கு என் நன்றிகள் நண்பா

arasan சொன்னது…

PREM.S கூறியது...
உங்கள் பள்ளிக்கு சென்றது போல் ஓர் உணர்வு அருமை//

மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
அருமையான நினைவலை பதிவு//

மிகவும் நன்றிகள் ஆசிரியரே

arasan சொன்னது…

விமலன் கூறியது...
படித்த பள்ளிக்கு உங்களது மனம் இன்னும் விடுமுறை விடவில்லை.//

அதெப்படி சார் முடியும் .. மிகுந்த நன்றிகள் சார்

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
அருமையான நினைவலைகள் அரசன்...ரசித்தேன்..//

மிகவும் நன்றிகள் சகோ

arasan சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மலர்ந்த நினைவலைகளுக்குப் பாராட்டுக்கள்..//

மிகுந்த நன்றிகள் சகோ

arasan சொன்னது…

உழவன் ராஜா கூறியது...
பள்ளிகூட வாழ்க்கை நினைவலைகள் மிகவும் அருமை நண்பா...
நமது இலந்தபழத்தை விட்டுவிட்டாயே நண்பா ..//

சொல்லணும் என்றால் நிறைய சொல்லணும் நண்பா ..
கொஞ்சம் நாகரிகம் கருதி நிறையவே தவிர்த்து இருக்கின்றேன் ..
அதெலாம் உங்களுக்கு தனியாக கூறுகின்றேன் ..

arasan சொன்னது…

கலை கூறியது...
ரொம்ப நன்றிங்க அடிமை என்னை மதிச்சி ungada palli அன்பவத்தை பகிர்ந்தமைக்கு//

மிகுந்த நன்றி கலை

arasan சொன்னது…

கலை கூறியது...
அரசன் நல்லத் திட்டிப் போடதிங்க ...சொல்லிடுறேன் ...என்னோட டேம்ப்ளடே கமென்ட் உங்களுக்காக ...

சுப்பரா இருக்கு அரசன் பதிவு//

ம்ம்ம் . நன்றி

arasan சொன்னது…

கலை கூறியது...
படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். தமிழ் மன்றதேர்வில் முதல் மாணவனாய் வந்து//////////////////////

கேட்டுகோங்க நண்பர்களே அரசன் ரொம்ப படிப்பிஸ் ஆம் ...ம்ஹும்ம்ம்மம்ம்ம்ம் ...

இப்புடிலாம் சொன்னா நாங்க நம்பிடுவமக்கும்//


நான் சொல்ல வந்தது உனக்கு புரியல ..

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
படிக்கப் படிக்க என் பள்ளி நாட்களைப் புரட்ட ஆரம்பித்து விட்டது மனசு.

பால்யத்தின் சேட்டை பகிர்வுக்கு நன்றிங்க அரசன்.//


அன்புக்கு நன்றிங்க அண்ணே ..
சேட்டைகள் நிறைந்த காலங்கள் அது ..

arasan சொன்னது…

thendralsaravanan கூறியது...
வாராதா வாராதா ....பள்ளி நாட்கள் மறுபடியும்!ம்ம்ம்ம்....... நான் அமைதியாத் தானே இருந்தேன் அப்புறம் எப்படி இந்த பயலுங்களுட்ட மாட்டிகிட்டேன் மறுபடியும் பள்ளி நாட்களை தொடர ஆசிரியராக!//


வாங்க அக்கா .. வாங்க ..
ஹா ஹா ... நீங்க கொடுத்து வைத்தவர்கள் அக்கா ..
நன்றி ..

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
பள்ளி நாட்களை நினைக்கும் போது உள்ளம மிகவும் உவகை கொள்கிறது இல்லையா, வாழ்த்துக்கள் அரசன்....!!!

23 மார்ச், 2012 11:46 am//

உண்மைதான் அண்ணே ..
மிகுந்த நன்றிகள் அண்ணே

arasan சொன்னது…

சசிகலா கூறியது...
அப்புறம் எல்லா பசங்களுக்கும் மிட்டாய் கொடுத்தாங்க. சிலது அழுவும், சிலது சிரிக்கும், நான் இரண்டுக்கும் இடைப்பட்டு மிரண்டு தான் கிடந்தேன் ..மெல்ல மெல்ல எல்லாமே பழக்கமாச்சு. //மிட்டாய் வாங்கிக்கிட்டு மிரள விழித்தீர்களா ?
தாமத வருகைக்கு மன்னிக்கவும் பள்ளி நாட்களை படங்களுடன் அருமையாக பதிவாக்கிய விதம் அருமை .//

அன்பின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள் மேடம்

arasan சொன்னது…

யசோதா காந்த் கூறியது...
மீண்டும் பள்ளிகூடதிற்கு சென்று வந்தாகி விட்டது ...அருமை ..ஒவ்வொருவருக்கும் பள்ளிக்கூடத்தை பற்றிய சுவையான நினைவுகள் உண்டு ...எனக்கும் இப்பொழுது ஞாபகத்தில்..நன்றி அரசன் சே அவர்களே ..
யசோதா காந்த்//

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் என் நன்றிகள்

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
ரசனையோடு சொன்ன விதம் சில இடங்களில் சிரிக்கவும் வைத்தது அரசன்.அந்தக் காலங்கள் மீண்டும் கைக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்.அதுவும் அந்த முண்டாசு கட்டின வாத்தியார் வரணும் !//

அந்த காலங்கள் மீண்டும் கிடைத்தால் அதை கூற வார்த்தைகளே இருக்காது அக்கா ...
மிகுந்த நன்றிகள் அக்கா

arasan சொன்னது…

Seshadri e.s. கூறியது...
நன்றாக இருந்தது தங்களின் பதிவு!

-காரஞ்சன்(சேஷ்)//

மிகுந்த நன்றிகள் சார்