சென்ற வாரம் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது, இரயிலில் டிக்கட் கிடைக்காமல் போனதால் வேறு வழியின்றி பேருந்தை நோக்கியது என் கவனம்! கோயம்பேடு பேருந்து நிலையம் மாதிரி பெரியதும், சுகாதாரம் குறைந்ததும் இல்லை என்று சொல்வதில் தவறில்லை! பெரும்பாலும் எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகளை எத்தனை தொலைவில் இருந்தாலும் எளிதில் அடையாளம் காணலாம், அம்புட்டு அவ லட்சணமாய் தனியாக தெரியும்!
இந்த முறை அதே எண்ணத்தில் சென்ற எனக்கு பேரதிர்ச்சி, பளிச்சென்று கவர்ச்சி நடிகை போன்று காட்சி தந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்தியது. இன்பக்கடலில் அப்படியே நீந்தி ஒருவழியாக பேருந்தில் ஏறினேன்! பிறகு தான் விளங்கியது இது அதே பழைய பல்லவிதானென்று! எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா, வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்! மண்டை கொஞ்சமாய் சூடேறியது! என்னா எழவுக்கு வெளிய மட்டும் பெயிண்ட் அடிச்சி ஊரை ஏமாத்தணும்! (என்னவோ போடா மாதவா?)
இருக்கையை தேடினால் கடைசி வரிசை தான் காலியாக இருந்தது, மற்ற இருக்கைகளில் பேக்குகள் இருந்தன, ஒரு இருக்கையில் காலண்டர் இருந்தது (தமிழண்டா!!!). எப்படி இடம் பிடிப்பதென்று பல்கலைகழகம் ஆரம்பிக்க தமிழன் ஒருவனுக்கே அந்த தகுதி இருக்கிறது. கடைசி வரிசையில் வலது புற சன்னல் ஓரம் என் பேக்கை வைத்து விட்டு, தண்ணீர் வாங்க சென்றேன்! இரண்டு பேருந்துகளுக்கு இடையில் ஒரு "குடிமகன்" வெகு அவசரமாக தாக சாந்தி நடத்திக்கொண்டிருந்தார்! (ம்ம்ம்ம் .. அவனவன் பிரச்சினை அவனவனுக்கு).
ஒருவழியாக பேருந்து கிளம்பியது நான் என்ன நடக்க கூடாது என்று எதிர்பார்த்தேனோ அதுதான் நடந்தேறியது, (என் எண்ணம் அம்புட்டு மோசமானது போல)அந்த குடிமகன் மிகச்சரியாய் என் அருகில் அமர்ந்து கொண்டார், அதன்பிறகு நான் பட்ட அவஸ்தை இருக்கே...... வேண்டாம் விடுங்க என் கஷ்டம் என்னோட போகட்டும்! அந்த சுக போக தருணத்தில் இன்னும் இனிமை கூட்டினார் நம் திடமான பதிவர், "போன் பண்ணியவர், யோவ் உனக்கா கால் வந்துடுச்சு சாரி, நான் அந்த புள்ளைக்கு தானே போட்டேன் எப்படி இவருக்கு வந்திருக்கும் என்று தானே பேசிக்கொண்டு கால் கட் செய்து களிப்பை? தந்தார் ".... (நீ நல்லா வருவைய்யா , நல்லா வருவ....)
இனி எந்தப்பேருந்தில் பின் வரிசை இருக்கைகளை கண்டால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிச்சிர மாட்டேன்!