புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 21, 2014

கண்ணாடி வளையல்கள்...(Semman Devathai # 16)





கலைந்த கூந்தல், 
தங்கம் கண்டிரா காது,
வலதில் இரண்டு,
இடதில் மூன்றாய் 
சாயமங்கிய 
கண்ணாடி வளையல்கள்,
மேற்சட்டைக்கு எதிர் வண்ணத்தில் 
பாவாடை,
கர கரக்கும் 
கறுத்த கொலுசு,
இவைகள் போதுமாயிருக்கிறது 

அழகியை 
பேரழகியாக்க !!!


Post Comment

10 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இயற்கை அழகு சிறப்பு ...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அழகு மிளிரும் கவிதை! பாராட்டுக்கள்!

பால கணேஷ் சொன்னது…

கவிதை வெகு ஜோர் அரசன்.

ரூபக் ராம் சொன்னது…

உண்மைதான் :) உங்க கவிதையை நான் திருடிக்கொள்ளப் போறேன்.

ராஜி சொன்னது…

அதுதான் நிஜ அழகு. பவுடர் பூசியதெல்லாம் வெறும் பகட்டு. எல்லாம் சரி, இதான் உனக்கு அழகுன்னு நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா!?

aavee சொன்னது…

அழகி போதுமே.. பேரழகி கூட வேண்டாமே..

aavee சொன்னது…

ரூபக், திருடி யாருக்கு கொடுக்க போறீங்க? ;-)

aavee சொன்னது…

// நீயும் வரப்போறவளுக்கு தங்கம், புடவைன்னு வாங்கித் தர மாட்டியா!?//

ராஜிக்க்கா, வாங்கித் தரேலேன்னா கேக்காம இருந்திட போகுதா என்ன? கவிதைல சொல்ற பொய்களை நிஜத்தில் எதிர்பார்க்கலாமா ;-)

ஜீவன் சுப்பு சொன்னது…

அரசரு அடிச்சு தொம்சம் பண்றாரு ..!

நீ கலக்கு அரசா ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எளிமை தான் அழகுக்கு அழகு சேர்ப்பது!

நல்ல கவிதை அரசன். பாராட்டுகள்.