உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு
கேட்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில்
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை,
எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும்
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய்
ஆட்கொள்கின்றதே!
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?
போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...
Tweet |
0 கருத்துரைகள்..:
கருத்துரையிடுக